முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சி அ.தி.மு.க.வில் இணைந்தது

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, பிப்.27 - தமிழகத்தில் செயல்பட்டு வரும் மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சி கலைக்கப்பட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க. இணைந்தனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில், நேற்று பிற்பகல் (26.2.2011 ​ சனிக் கிழமை), மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சியின் தலைவர் .துரை அரசனும், மாநில நிர்வாகிகளான பொதுச் செயலாளர் பெ.க. ராஜேன் பிரவீன் குமார், பொருளாளர் சி. காத்தமுத்து, மகளிர் அணிச் செயலாளர் வாணி மாரிமுத்து, பெருநகர சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் ஜே. டேனியல் ஜோசப், சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்  அ. ஈசாக், ஒருங்கிணைப்பாளர் பெ.க. ராஜேஸ் ஆனந்த், கொள்கை பரப்புச் செயலாளர் ப. இமான் சேகர், இளைஞர் அணிச் செயலாளர் தே. மதுரம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட 25 மகளிர் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களை அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்