எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.27 - ஸ்ரீரங்கம் அருகே உள்ள சுபயபுரம் கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், ஜெயலலிதாவை மகத்தான வெற்றி பெறச்செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 19, 20 மற்றும் 21ம் தேதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சுற்றுப்பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக 19ம் தேதியன்று மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 190 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சுற்றுப்பயணத்தின் 2வது நாளான 20-ம் தேதியன்று அந்தநல்லூர் ஒன்றியத்தின் கீழுள்ள பெரியகருப்பூர் ஊராட்சி, சுபயபுரம் கிராமத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்க சென்றபோது அந்த கிராமத்து பொது மக்கள் சுபயபுரம் கிராமத்தில் தெருவிளக்கு எரியாதது, குடிநீர் பற்றாக்குறை மற்றும் சிமெண்ட் சாலை அமைப்பது போன்ற பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்தனர்.
சுபயபுரம் கிராமத்து மக்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டரை அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் அந்த கிராமத்தில் உள்ள மொத்தம் 23 தெரு விளக்குகளில், செயல்படாமல் இருந்த 13 தெரு விளக்குகள் உடனடியாக பழுது நீக்கப்பட்டு, அனைத்து தெரு விளக்குகளும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அதே போல், காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகிக்கப்படும் குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டு, குடிநீர் வினியோகம் சீராக்கப்பட்டது.
மேலும், சுபயபுரம் கிராமம் பெரியசாமி வீடு முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை 200 மீட்டர் நீளத்திற்கு 3 மீட்டர் அகலத்திற்கு 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றிய பொது நிதியின் கீழ் சாலைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சாலைப்பணி 20 நாட்களுக்குள் முடிக்கப்படும்.
அதே போல் ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஆர்ச் அருகில் வளைந்து நெளிந்து நின்ற மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு தெரிய வந்தவுடன், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வளைந்திருந்த மின் கம்பத்திற்கு மாற்றாக உடனடியாக புதிய மின் கம்பம் 22.6.2011 அன்று நடப்பட்டு, மின் வினியோகம் சீராக்கப்பட்டது.
மேலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3.2 கிலோ மீட்டர் நீளமுள்ள அதவத்தூர்-கொய்யாத்தோப்பு சாலை முடிவில், 110 மீட்டர் நீள சாலை நெடுஞ்சாலைத் துறையாலோ, ஊராட்சி ஒன்றியத்தாலோ பராமரிக்கப்படாததை சுட்டக்காட்டி `முதலமைச்சர் தொகுதியில் எல்லை படுத்தும் பாடு' என்ற தலைப்பில் பத்திரிகைகளில் வந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சாலைப் பணியை உடனடியாக மேற்கொள்ள ஆணையிட்டார்.
அதனடிப்படையில் 2 லட்ச ரூபாய் செலவில் நெடுஞ்சாலைத் துறையில் இந்த சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் அனைத்தும் 4.7.2011க்குள் முடிவடைந்துவிடும்.
முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களிலும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.