எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஜூன்.27 - பாமர மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சமையல் கேஸ் மீதான மாநில வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநில முதல்வர்களுக்கு எல்லாம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் கடிதம் எழுதப் போகிறாராம்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை அடிக்கடி உயர்த்தி வருகிறது. சமையல் கேஸ் விலைகளையும் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. ஏழை மக்களைப் பற்றி இந்த அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அதற்கு மாறாக எண்ணெய் நிறுவனங்களுக்கே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு வக்காலத்து வாங்கி பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பாரதீய ஜனதா, இடதுசாரிகள் என்று எல்லா கட்சிகளுமே போராட்டம் நடத்திப் பார்த்து விட்டன. ஆனால் அந்த போராட்டத்திற்கு பலன்தான் இல்லை. இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஒரு வரியில் சொல்லி விட்டு பிறகு மவுனம் சாதித்து விடுகிறது மத்திய அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று சொல்லிச் சொல்லியே இவர்கள் விலையை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ, நாட்டு மக்கள்தான். இந்த விலை உயர்வால் லாரிகளில் சரக்கு கட்டணம் உயர்கிறது. அதன் விளைவாக காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்கிறது. தனியார் பஸ் கட்டணமும் உயர்ந்து விட்டது. இப்படி மக்கள் பல வழிகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் அரசு அதைப் பற்றி எல்லாம் சிந்திப்பதே இல்லை. இத்தனைக்கும் இந்த அரசில் பல பொருளாதார மேதைகள் இருக்கிறார்கள். இருந்தும் என்ன பயன்? மக்கள் கஷ்டப்படுவதுதான் மிச்சம். இது ஒருபுறமிருக்க, விலை உயர்வுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறது மத்திய அரசு. அது மட்டுமின்றி மாநில அரசுகளுக்கு அட்வைஸ் வேறு.
மாநில முதல்வர்கள் எல்லோரும் சமையல் கேஸ் மீதான மாநில வரிகளை குறைக்க வேண்டுமாம். இப்படி வலியுறுத்தி அவர்களுக்கு கடிதம் எழுதப் போகிறாராம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. விலை உயர்வு ஏன் செய்யப்பட்டது? என்பதை விளக்கி மாநில முதல்வர்களுக்கு இவர் கடிதம் எழுதப் போகிறார். மேலும் பாமர மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் சமையல் கேஸ் மீதான விற்பனை வரியை குறைக்க சொல்லி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப் போகிறாராம். முன்னதாக, மத்திய அரசு கேஸ், டீசல் விலையை உயர்த்திய போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் தன் மக்களின் மீதுள்ள நன்மை கருதி சமையல் கேஸ் மீதான விற்பனை வரியை வாபஸ் பெற முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த முடிவால் ஒரு சிலிண்டருக்கு ரூ. 50 என்பது இல்லாமல் ரூ. 34 தான் வசூலிக்கப்படும். அதாவது, மேற்கு வங்க மக்களுக்கு விற்பனை வரி வாபஸ் பெறப்பட்டதால் ரூ. 16 மிச்சமாகிறது.
இதே போல் எல்லா முதல்வர்களும் வரியை குறைக்க வேண்டுமாம். அப்படி வலியுறுத்தி பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதப் போகிறாராம். காங்கிரஸ் முதல்வர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று அவர் கடிதம் எழுதப் போகிறாராம். மத்திய அரசு நேற்று முன்தினம் சமையல் கேஸ் விலையை ரூ. 50 வீதமும், ஒரு லிட்டர் டீசலை ரூ. 3 வீதமும், ஒரு லிட்டர் கெரசினை ரூ. 2 வீதம் உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இடங்களில் விதவிதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று இவர்கள் போராடுகிறார்கள். ஆனால் மத்திய அரசோ முடியாது என்கிறது. ஆனால் மாநில முதல்வர்கள் வரியை குறைக்க வேண்டுமாம். இது எப்படி இருக்கு!
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.