முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் கண்ணன் எழுதிய நூல் அறிமுகம் - பாராட்டு விழா

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.27 - அகச்சுரப்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கண்ணன்எழுதிய நூல் அறிமுகம் மற்றும் பாராட்டு விழா நேற்று மதுரையில் நடந்தது.

மதுரை அகச்சுரப்பியல் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் கே.கண்ணன் எழுதிய திருக்குறள் மும்மொழி நூல் அறிமுகவிழாவும், அவருக்கு பாராட்டு விழாவும் நேற்று மாலை மதுரை இந்திய மருத்துவ கழக கட்டிட அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பாரதி தேசிய பேரவை தலைவர் ஜான்மோசஸ் தலைமை வகித்தார். சர்க்கரை நோய் கழக முன்னாள் தலைவர் சண்முகபாண்டியன் வரவேற்றார். ரோட்டரி சங்கதலைவர் கார்மேகம் மணி நூலை வெளியிட உலக திருக்குறள் பேரவை தலைவர் ந.மணிமொழியன் பெற்றுக்கொண்டார். பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 

 நிகழ்ச்சியில் டாக்டர்கள் அழகப்பன், ரவிச்சந்திரன், ஜான்சன் சுந்தரராஜன், வருமானவரித்துறை முன்னாள் இணை ஆணையர் மோகன்தாஸ்காந்தி, டாக்டர் தியாகராஜன், மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி முதல்வர் அருணகிரி, விஸ்வலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் டாக்டர் கண்ணன் ஏற்புரை நிகழ்த்தினார். ஆசிரியை சுலைகாபானு நஜீமுதீன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்