முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் விரட்டியடிப்பு

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், ஜூன்.27 - ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டியடித்தனர். கடந்த 20 -ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 1500 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் விரைந்து வந்து எல்லை மீறி மீன்பிடிப்பதாக கூறி 23 மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து சென்று விட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்து கூறி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க கடலுக்கு செல்வதாகவும் கூறினர். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 700 படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சச்சத்தீவு அருகே மீனவர்கள் வலையை விரித்து மீனுக்காக காத்திருந்தனர். அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் 5 ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் ஒலி பொருக்கி மூலம் இங்கு மீன் பிடிக்க கூடாது உடனே புறப்பட்டு செல்லுங்கள் என்று எச்சரித்தனர். மேலும் அவர்கள் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் 1500 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை பாதியிலேயே கரை திரும்பினர்.  

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்; கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்த போது இலங்கை கடற்படை வீரர்கள் எங்களை விரட்டியடித்தனர்.  அப்போது அவர்கள் இங்கு மீன் பிடித்தால் வலைகளை பிடுங்கி விடுவோம் என்று கூறினர். இதனால் பயந்துபோன நாங்கள் பாதியிலேயே கரை திரும்பி விட்டோம் என்று கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்