முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல்,டீசல், கியஸ் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிவகங்கை  ஜூன்.- 28 -பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை  கண்டித்தும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காதததை கண்டித்தும் சிங்கம்புணரியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய அமைப்பாளர் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி தலைவர் அபிராமன் வரவேற்றார். மாநிலத்துணைத்தலைவர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், கோட்ட பொறுப்பாளர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர் குரு.நாகராஜன், அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், ராமசேகர், செயற்குழு உறுப்பினர்கள் சேவுகரெத்தினம், கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர் பொதுச்செயலாளர் ராஜா செல்வ பாண்டி நன்றி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்