முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜிலியம்பாறை அருகே 7 வயது மாணவி கற்பழிப்பு

புதன்கிழமை, 29 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

குஜிலியம்பாறை, 29 - குஜிலியம்பாறை அருகே 7 வயது பள்ளி மாணவியை கற்பழித்த வாலிபரைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள மெத்தப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. இவரது 7 வயது மகள் அங்காள ஈஸ்வரி. இதே பகுதியில் உள்ள ஒருபள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வருபவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோஸ் என்பவரின் மகன் சரவணன். 19 வயதான சரவணன் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரவணன் நைஸாக அங்காள ஈஸ்வரியை மிட்டாய் வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து கற்பழித்து விட்டார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து விட்டார். இந்நிலையில் பயங்கர காய்ச்சல் ஏற்படவே, டாக்டரிடம் கொண்டு போயுள்ளனர். டாக்டர் பரிசோதனை செய்த போது  சிறுமியின் உடல்களில் காயங்கள் இருந்தது தெரியவரவே இதுகுறித்து கேட்டபோது  நடந்ததை கூறியுள்ளார்.  உடனே அவரது பெற்றோர்கள் எரியோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவான சரவணனைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்