முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பல இடங்களில் பரவலாக கனத்த மழை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூன் 30 -  ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா, கடலோர ஆந்திரா,  ராயலசீமா பகுதிகளில் நேற்று பரவலாக கனத்த மழை பெய்தது.தென்மேற்கு பருவ மழை இந்தியாவில் பல இடங்களில் பெய்ய துவங்கியுள்ளது.  பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இப்போது ஆந்திர மாநிலத்திலும் துவங்கியுள்ளது.

தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக ரெங்கடாபுரத்தில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

பத்ராச்சலம், மகபூப்நகர், விசாகப்பட்டினம், வாரங்கல் மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளதாக ஆந்திர வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை வரை ஆந்திராவின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்