முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர்,ஜூன்.30 - மேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட நாளான ஜூன் 30 ம் தேதி அஞ்சலி செலுத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆண்டுதோறும் வருவது வழக்கம். இன்று ஜூன் 30 என்பதால் திருமாவளவன் மேலூர் வருகிறார். 

அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்று வரவிருப்பதால் மேலூரை சுற்றியுள்ள முனிக்கோயில், புது சுக்காம்பட்டி, அழகிரிபட்டி, தும்பப்பட்டி ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கிட்டத்தட்ட 300 பேர் இங்கு முகாமிட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்