முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி அறிக்கை வரும் 5ம் தேதி தாக்கல்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை,1 - சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழு அதன் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் வரும் 5 ம் தேதி தாக்கல் செய்யும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமச்சீர் கல்வி தொடர்பாக இந்த நிபுணர் குழுவின் 5 வது மற்றும் இறுதி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சமச்சீப் பாடத் திட்டத்தை ஆராய தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு கடந்த 17 ம் தேதி அமைத்தது. இந்த குழு நான்கு முறை கூட சமச்சீர் கல்வி குறித்து விரிவாக ஆராய்ந்தது. 

சென்னை ஐகோர்ட்டில் வரும் 6 ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். எனவே இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்பட்டு தொகுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 10 ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படவிருந்தது. ஆனால் சமச்சீர் பாட புத்தகங்களின் தரம், கல்வித் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை என்று கூறி இந்த ஆண்டு பழைய பாடத் திட்டமே பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இது தொடர்பாக சமச்சீர் கல்வி சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்துக்கு ஐகோர்ட் இடைக் கால தடை விதித்தது. 

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. மீதமுள்ள வகுப்புகளில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு அமைத்து ஆராய வேண்டும். அந்த குழுவின் அறிக்கையின்படி பிற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஐகோர்ட் உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்