முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமியின் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

லகிம்பூர், ஜூலை 1 - உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். லகிம்பூர் மாவட்டம் நிகாசன் என்ற கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சமீபத்தில் மரத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தினர். காவல்நிலையத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டதாக புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தங்களது மகளை இழந்து வாடும் அந்த குடும்பத்தாரை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ரேபரேலியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ராகுல்காந்தி திடீரென நிகாசன் கிராமத்திற்கு சென்றார். அங்கு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்றார். சிறுமியை இழந்து தவித்த அவளது பெற்றோரிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். ராகுலைக் கண்டதும் அந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் தங்கள் மகள் இறந்து பல நாட்கள் ஆகியும் தங்களுக்கு முதல் தகவல் அறிக்கைகூட தரவில்லை என்று ராகுலிடம் அவர்கள் முறையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளின் கொலை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை செய்யாமல் நீதி கிடைக்காது என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்