முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன்: அரையிறுதியில் சானியா ஜோடி

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 1 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் கா ல் இறுதிச் சுற்றில் ரேபல் நடால், ஆன்டி முர்ரே, ஜோகோவிக், மற்று ம் டிசோங்கா ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினர். 

மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. மகளிர் கலப்பு இரட் டையர் பிரிவில் ரோகன் பொபண்ணா மற்றும் சானியா ஜோடி 2 -வ து சுற்றிலும், பூபதி மற்றும் வெஸ்னினா ஜோடி 3 -வது சுற்றிலும் வெ ற்றி பெற்றன. 

இந்த வருடத்தின் 3 - வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள் ட ன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கடந் த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது. இது தற்போது அரை இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இதற்காக அவ ர்கள் தீவிரப் பயிற்சியுடன் இங்கு வந்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான நிலையில் உள்ளது.   

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் உலக நம்பர் - 1 வீரரான ரேபல் நடாலும், அமெரிக்காவின் முன்னணி வீரரான மர்டி பிஷ்சும் பலப்பரிட்சை நடத்தினர். 

இதில் ஸ்பெயின் வீரரான நடால் அபாரமாக ஆடி, 6 - 3, 6 - 3, 5 - 7, 6 - 4 என்ற செட் கணக்கில், அமெரிக்க வீரரை தோற்கடித்து அரை இறு திச் சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் சுமார் 1 மணி மற்றும் 30 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 

மற்றொரு கால் இறுதி ஒன்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேயும், ஸ்பெயின் வீரர் லோபசும் மோதினர். இதில் முர்ரே சிறப்பாக ஆடி, 6 - 3, 6 - 4, 6 - 4 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரரை தோற்கடித்தார். 

செர்பிய வீரர் ஜோகோவிக் 6 - 2, 3 - 6, 6 - 3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்டை வீழ்த்தினார். 3 -ம் நிலை வீரரும்,  சுவிஸ் வீரருமான ரோஜர் பெடரர், பிரான்ஸ் வீரர் டிசோங்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரோஜர் பெடரர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் கால் இறுதியில் இதுவரை தோல்வி அடைந்தது கிடை யாது. தற்போது முதல் முறையாக தோல்வி அடைந்து இருப்பது குறி ப்பிடத்தக்கது. 

கலப்பு இரட்டையர் பிரிவின் 2 -வது சுற்றில் இந்தியாவின் ரோகன் பொபண்ணா மற்றும் சானியா மிர்சா ஜோடி 7 - 5, 6 - 2 என்ற செட் கணக்கில், ஜெமி முர்ரே(இங்கிலாந்து), ஜெர்மிலா(ஆஸ்திரேலியா) இணையை வீழ்த்தியது. 

மகேஷ் பூபதி மற்றும் வெஸ்னினா(ரஷ்யா) ஜோடி 3 -வது சுற்றில் 6 - 2, 7 - 6 என்ற நேர் செட் கணக்கில், எரிக் புட்டோரக் (அமெரிக்கா) மற்றும் வோல்கோ(பெலாரஸ்) இணையை தோற்கடித்தது. 

மகளிருக்கான இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் எலீனா வெஸ்னினா(ரஷ்யா) ஜோடி கால் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்