எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை 2 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சாவின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்த அதாவது சாதிக்பாட்சா எந்தச் சூழ்நிலையில் மரணமடைந்தார் என்பது குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து மருத்துவர்கள் குழு ஒன்று சென்னைக்கு வருகிறது. டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த(எய்ம்ஸ்) டாக்டர்கள் குழு ஒன்று சென்னைக்கு விரைவில் வருகிறது. இந்த குழுவினரை மத்திய புலனாய்வுத் துறை அனுப்பிவைக்கிறது. சாதிக்பாட்சாவின் சாவில் மர்மம் இருப்பதாக சி.பி.ஐ. கண்டறிந்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி லஞ்சப்பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியும் கைது செய்யப்பட்டு அதே திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான 38 வயதான சாதிக்பாட்சாவிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாற சாதிக்பாட்சா திட்டமிட்டிருந்தாராம். அதைத் தொடர்ந்து டெல்லி செல்லவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த அதேநாளில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கடந்த மார்ச் 16 ம் தேதி சாதிக்பாட்சா மர்மமான முறையில் இறந்துகிடந்தார். சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி தெரிவித்தார். சி.பி.ஐ. விசாரணையின் நெருக்கடி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பின்னாளில் எழுந்தது. அதற்கு சில காரணங்களும் கூறப்பட்டன. கொல்லப்பட்டதாக கருதப்படும் சாதிக்பாட்சா முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து லஞ்ச விவரங்கள் தொடர்பான அனைத்து ரகசியங்களையும் அறிந்தவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் மற்றும் பலருக்கும் லஞ்சம் கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் அவருக்கு தெரியுமாம். எனவே இவர் அப்ரூவராக மாறிவிட்டால் அனைத்து விஷயங்களும் அம்பலமாகிவிடும். பிறகு கம்பி எண்ண வேண்டிவரும் என்பதை உணர்ந்து அவரை கொலை செய்திருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகிக்கிறது. மேலும் சாதிக்பாட்சா மரணமடைந்த காலகட்டமும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. அந்த காலகட்டத்தில்தான் சாதிக்பாட்சா இறந்திருக்கிறார். மேலும் அப்ரூவராக மாறவும் அவர் திட்டமிட்ட நேரமும் அதுதான். அதற்காக டெல்லி புறப்பட்ட நாளன்றுதான் அவர் மரணமும் அடைந்திருக்கிறார். மேலும் அவர் இறந்து 7 மணி நேரம் கழித்தபிறகுதான் தற்கொலை கடிதம் என்ற ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ராசாவும் அவரது மனைவியும் நல்லவர்கள் என்று சர்ட்டிபிகேட் வேறு தரப்பட்டுள்ளதாம். 7 மணி நேரம் கழித்து கைப்பற்றப்பட்ட இந்த கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதால் சி.பி.ஐ.யின் சந்தேகம் வலுத்துள்ளது. எனவே சாதிக்பாட்சா கொல்லப்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது. அதற்கான ஆதாரங்களும் அதற்கு கிடைத்துள்ளன. அதனால்தான் சாதிக்பாட்சாவின் மர்மச் சாவு குறித்து விசாரிக்க அதாவது எந்த சூழலில் அவர் இறந்தார் என்பது குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து டாக்டர்கள் குழுவை அனுப்ப சி.பி.ஐ. முடிவு செய்துவிட்டது.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் குழு ஒன்று இதற்காக வெகு விரைவில் சென்னைக்கு வருகிறது. இந்த குழுவினர் சாதிக்பாட்சா உடல் புதைக்கப்பட்ட கல்லறையை தோண்டி அவரது உடலை எடுத்து உடலின் பல்வேறு பாகங்களில் பலவிதமான சோதனைகளை நடத்த உள்ளனர் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாதிக்பாட்சாவின் மர்மச் சாவு குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 வது பிரிவின் கீழ் ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையை துவக்கிவிட்டது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.
முன்னதாக சாதிக்பாட்சா மரணமடைந்தபோது தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் பலவிதமான சந்தேகங்களை எழுப்பின. சாதிக்பாட்சாவின் சாவில் மர்மம் உள்ளது என்று அப்போதைய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து அப்போதிருந்த மாநில அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு செய்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை நடந்துவருகிறது. மரணமடைந்த சாதிக்பாட்சா ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரும் கூட. இவருக்கு சென்னையிலும், பெரம்பலூர் போன்ற இடங்களிலும் பல நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பலவிதமான அதிரடி சோதனைகளை நடத்தினார்கள். அதன்பிறகுதான் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அந்த காலக்கட்த்தில்தான் சாதிக்பாட்சா மரணத்தை தழுவ நேர்ந்தது. இது கொலையா? அல்லது தற்கொலையா ? என்பது டெல்லியில் இருந்து டாக்டர்கள் குழு வந்தபிறகு அனைத்து விவரங்களும் வெளிச்சத்துக்கு வரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.