முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை,ஜூலை.2 - ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்தித்து வருவதாக பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால் இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். ராஜபக்சேவின் கருத்தை பிரதமர் மறுத்திருக்க வேண்டும். இலங்கையில் போர் உச்சக்கட்டமாக நடைபெற்ற வேளையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மக்கள் போராடிய போது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு கூறியிருப்பதாக மன்மோகன்சிங் தெரிவித்தார். ஆனால் ராஜபக்சே அதை மறுத்தார். அதைப் போல இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவி எதையும் இந்தியா செய்யவில்லை என மன்மோகன்சிங் கூறினார். ஆனால் இந்தியா செய்த உதவியால்தான் வெற்றி பெற முடிந்தது என்று ராஜபக்சே கூறினார். 

இவ்வாறு தங்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காக மன்மோகன்சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். எனவேதான் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பித்தனர். இன்னமும் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் பிரதமர் ஈடுபட வேண்டாம் என்று நெடுமாறன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்