முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான காலநிலை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜூலை.2 - மோசமான காலநிலை காரணமாக நேற்று அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்வது நிறுத்தப்பட்டது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இந்த குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க கடந்த 29-ம் முதல் யாத்திரை தொடங்கியது. நேற்றும் பயணிகள் யாத்திரை செல்வதாக இருந்தது. ஆனால் கோயிலுக்கு செல்லும் இரண்டு பாதைகள் வழியாக மோசமான காலநிலை நிலவியதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாத்திரை நேற்று நிறுத்தப்பட்டது. காலநிலை சரியானதும் யாத்திரை தொடங்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 35 ஆயிரம் பேர் யாத்திரை சென்று பனிலிங்கத்தை வழிபட்டுள்ளனர். பனிலிங்க கோயில் தரையில் இருந்து சுமார் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இமயமலையின் தென்பகுதியில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்