முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமாவில் மீண்டும் நடிக்கிறார் நடிகர் சிரஞ்சீவி

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

நகரி,ஜூலை.2 - அமிதாபட்சன் கோரிக்கையை ஏற்று சினிமாவில் மீண்டும் நடிப்பதாக நடிகர் சிரஞ்சீவி அறிவித்துள்ளார். ஆந்திராவில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் சிரஞ்வி, அரசியலில் குதித்து தனிக்கட்சி தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அக்கட்சியினை காங்கிரசுடன் இணைத்து தானும் காங்கிரசில் சேர்ந்துவிட்டார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், சில தினங்களுக்கு முன் அவர் கூறும்போது சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றார். ஆந்திர முதல்வராகத்தான் விரும்புகிறேன். அதைத்தான் என் மாநில மக்களும் விரும்புகிறார்கள் என்றார். 

இந்தநிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி தனது 150-வது படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்று சிரஞ்சீவி திடீரென சினிமாவில் நடிப்பேன் என்று அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்