முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை.2 - நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 7 ம் தேதி மேற்கொள்ளவிருந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வங்கி தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் வெங்கடாசலம் கூறியதாவது, 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 1 ம் தேதி தொடங்கவுள்ளது. மத்திய அரசின் கவனத்துக்கு வங்கி ஊழியர்களின் பிரச்சினைகளை கொண்டு வருவதற்காகவே வேலை நிறுத்தப் போராட்டத்தை வரும் 7 ம் தேதி நடத்துவதாக இருந்தோம். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்பதால் 7 ம் தேதி நடத்துவதாக இருந்த இந்த போராட்டத்தை ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். 

வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தை மீண்டும் அமைத்து தேர்வு நடத்தி வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, வங்கிகள் இணைப்பு திட்டத்தை கைவிடுவது, பணிக் காலத்தில் ஊழியர் இறந்தால் வாரிசுகளுக்கு வேலை அளிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்