முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி சொத்து...!

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.3​ - முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக சேலம் அ.தி.மு.க.வழக்கறிஞர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சேலம் நிலவாரப்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மணிகண்டன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவர் சேலத்தில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆதரத்துடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்து வந்தார். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி வீரபாண்டி ஆறுமுகம் ஆபாசமாக பத்திரிக்கையாளர்களிடம் பேசியதையும் ஆதரத்தோடு டி.ஜி.பி.யிடம் கொடுத்து புகார் தெரிவித்துள்ளார். 

மேலும் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்த போது மாநகராட்சி தரப்பில் வாங்கப்பட்ட காரை நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தி வந்ததை ஆதரத்தோடு வெளியிட்டதோடு அவர் மீது வழக்கும் தொடர்ந்தார். வீரபாண்டியாரின் தம்பி மகனும் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான பாரப்பட்டி சுரேஷ்குமார்  சேலத்தில் நில அபகரிப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது குடும்பத்திற்கு மட்டும் ரூ.1,200 கோடி சொத்து இருப்பதாகவும் வெளியிட்டார். இந்த நிலையில் இவர் தங்களை பற்றி  அவதூறாக பேசிவருதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், அவரது தம்பி மகனுமான பாராப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், அவரது தம்பி மகனும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான பாராப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதை நான் சந்திக்க தயாராக உள்ளேன். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது அரசியல் வாழ்வின் தொடக்கம் முதல் தற்போது வரை அதாவது தான் தேர்தலில் பெற்ற வெற்றிகளை மட்டும் குறிப்பிட்டு தான் தேர்தலில் தோற்றது பற்றி எதுவும் குறிப்பிடாமல் ஏதோதான் பிறவி எடுத்ததே மக்கள் சேவை செய்யதான் என்பது போல தமாஷ் செய்துள்ளார்.

அவர் மீது உள்ள நன்மதிப்பாலும், மக்கள் ஆதரவால் 1974 முதல் இன்றுவரை தி.மு.க.மாவட்ட செயலாளராக உள்ளதாக கூறயுள்ளார். இவர் மீது உள்ள நல்லமதிப்பில் இன்று வரை தி.மு.க.மாவட்ட செயலாளராக இருக்கிறாரா? அல்லது அந்த காலத்திலேயே அடிதடி,ரவுடியிசம், கட்டை பஞ்சாயத்து,கொலை மிரட்டல் என்ற இவரின் அசாதாரணமான தகுதியின் அடிப்படையில் இந்த பதவியில் இருக்கிறாரா? என்பதை இவரால் துரத்தியடிக்கப்பட்ட தி.மு.க.முன்னோடிகளுக்கு தெரியும்.

நான் இவர்களை பற்றி பத்திரிக்கைகளிடம் கூறி விளம்பரம் தேடிக்கொள்வதாக சொல்லியுள்ளார்.நான் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கட்சியில் சேர்ந்ததையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அதற்கு இணையான புகழ் வேறு எதுவும் இல்லை. இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி பத்திரிக்கையாளர்களிடம் ஆபாசமாக பேசியதை டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன். அதற்கு ஆதாரமாக சி.டி.யை கொடுத்துள்ளேன்.  

அதைக் கூட முதல்வர் என்னை தானே பேசினார் பேசிவிட்டு போகட்டும் நாம் மக்களின் வளர்ச்சி குறித்து சிந்தித்து பாடுபடுவோம் என்ற உயர்ந்த நல்ல பண்பின் காரணமாக அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்.

என்னை தகுதி nullநிக்கம் செய்ய சொல்லி பார்கவுன்சிலுக்கு புகார் அனுப்பி உள்ளார். 18 ஆண்டுகளாக அரசியலில் உள்ள என் மீது எந்த குற்றச்சாட்டாடும் இல்லை.அவரது தம்பி மகன் பாராப்பட்டி சுரேஷ்குமார் 6 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் முதலில் அவரை தகுதி நிக்கம் செய்ய கடிதம் எழுத வீரபாண்டியாரை கேட்டுக் கொள்கிறேன்.

3 முறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு சுமார் 8 ஆயிரம் கோடி ஆகும். இதற்கான ஆதாரங்களை நான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரியிருக்கிறேன். இவர்களது குடும்பத்தினரின் பெயரில் சொத்து அபகரிப்பு பிரச்சனைகளும் உள்ளது. 

6 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவர் விரைவில் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்க உள்ளார். அந்த வாக்குமூலத்தில் இந்த கொலைகளில் யார்?யார்? சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் உள்பட பல்வேறு விஷயங்கள் வெளியே வரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அ.தி.மு.க.வட்ட பாக செயலாளர் பால்மார் கெட் சந்திரன், இலக்கிய அணி செயலாளர் உரை முரசு யூசப் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago