எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.3 - முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக சேலம் அ.தி.மு.க.வழக்கறிஞர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சேலம் நிலவாரப்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மணிகண்டன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவர் சேலத்தில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆதரத்துடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்து வந்தார். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி வீரபாண்டி ஆறுமுகம் ஆபாசமாக பத்திரிக்கையாளர்களிடம் பேசியதையும் ஆதரத்தோடு டி.ஜி.பி.யிடம் கொடுத்து புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்த போது மாநகராட்சி தரப்பில் வாங்கப்பட்ட காரை நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தி வந்ததை ஆதரத்தோடு வெளியிட்டதோடு அவர் மீது வழக்கும் தொடர்ந்தார். வீரபாண்டியாரின் தம்பி மகனும் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான பாரப்பட்டி சுரேஷ்குமார் சேலத்தில் நில அபகரிப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது குடும்பத்திற்கு மட்டும் ரூ.1,200 கோடி சொத்து இருப்பதாகவும் வெளியிட்டார். இந்த நிலையில் இவர் தங்களை பற்றி அவதூறாக பேசிவருதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், அவரது தம்பி மகனுமான பாராப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், அவரது தம்பி மகனும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான பாராப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதை நான் சந்திக்க தயாராக உள்ளேன். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது அரசியல் வாழ்வின் தொடக்கம் முதல் தற்போது வரை அதாவது தான் தேர்தலில் பெற்ற வெற்றிகளை மட்டும் குறிப்பிட்டு தான் தேர்தலில் தோற்றது பற்றி எதுவும் குறிப்பிடாமல் ஏதோதான் பிறவி எடுத்ததே மக்கள் சேவை செய்யதான் என்பது போல தமாஷ் செய்துள்ளார்.
அவர் மீது உள்ள நன்மதிப்பாலும், மக்கள் ஆதரவால் 1974 முதல் இன்றுவரை தி.மு.க.மாவட்ட செயலாளராக உள்ளதாக கூறயுள்ளார். இவர் மீது உள்ள நல்லமதிப்பில் இன்று வரை தி.மு.க.மாவட்ட செயலாளராக இருக்கிறாரா? அல்லது அந்த காலத்திலேயே அடிதடி,ரவுடியிசம், கட்டை பஞ்சாயத்து,கொலை மிரட்டல் என்ற இவரின் அசாதாரணமான தகுதியின் அடிப்படையில் இந்த பதவியில் இருக்கிறாரா? என்பதை இவரால் துரத்தியடிக்கப்பட்ட தி.மு.க.முன்னோடிகளுக்கு தெரியும்.
நான் இவர்களை பற்றி பத்திரிக்கைகளிடம் கூறி விளம்பரம் தேடிக்கொள்வதாக சொல்லியுள்ளார்.நான் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கட்சியில் சேர்ந்ததையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அதற்கு இணையான புகழ் வேறு எதுவும் இல்லை. இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி பத்திரிக்கையாளர்களிடம் ஆபாசமாக பேசியதை டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன். அதற்கு ஆதாரமாக சி.டி.யை கொடுத்துள்ளேன்.
அதைக் கூட முதல்வர் என்னை தானே பேசினார் பேசிவிட்டு போகட்டும் நாம் மக்களின் வளர்ச்சி குறித்து சிந்தித்து பாடுபடுவோம் என்ற உயர்ந்த நல்ல பண்பின் காரணமாக அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்.
என்னை தகுதி nullநிக்கம் செய்ய சொல்லி பார்கவுன்சிலுக்கு புகார் அனுப்பி உள்ளார். 18 ஆண்டுகளாக அரசியலில் உள்ள என் மீது எந்த குற்றச்சாட்டாடும் இல்லை.அவரது தம்பி மகன் பாராப்பட்டி சுரேஷ்குமார் 6 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் முதலில் அவரை தகுதி நிக்கம் செய்ய கடிதம் எழுத வீரபாண்டியாரை கேட்டுக் கொள்கிறேன்.
3 முறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு சுமார் 8 ஆயிரம் கோடி ஆகும். இதற்கான ஆதாரங்களை நான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரியிருக்கிறேன். இவர்களது குடும்பத்தினரின் பெயரில் சொத்து அபகரிப்பு பிரச்சனைகளும் உள்ளது.
6 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவர் விரைவில் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்க உள்ளார். அந்த வாக்குமூலத்தில் இந்த கொலைகளில் யார்?யார்? சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் உள்பட பல்வேறு விஷயங்கள் வெளியே வரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அ.தி.மு.க.வட்ட பாக செயலாளர் பால்மார் கெட் சந்திரன், இலக்கிய அணி செயலாளர் உரை முரசு யூசப் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.