எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.3 - லோக்பால் வரைவு மசோதா குறித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாவும் கலந்துகொள்ளும் என்று அதன் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அறிவித்துள்ளார்.
நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதை ஒழிக்கக்கோரி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காந்தீயவாதி அண்ணாஹசாரே சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனால் பயந்துபோன மத்திய அரசு, ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற உறுதி அளித்தது. இதனையொட்டி லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் அரசு தரப்பில் 5 பேரும் சிவில் பிரிவில் அண்ணா ஹசாரே தலைமையில் 5 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த இரண்டு பிரிவினரும் மசோதாவில் சேர்க்க வேண்டிய அம்சங்களை சேர்த்தன. லோக்பால் மசோதாவுக்கு பிரதமர், நீதிபதிகள், அதிகாரிகளையும் விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என்று சிவில் பிரிவு உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு பிரதிநிதிகளும் சிவில் பிரிவு உறுப்பினர்களும் 9 தடவைகள் சந்தித்து பேசினர். அப்போதும் இருதரப்பினர்களுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
இந்தநிலையில் வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என்று அண்ணா ஹசாரே அறிவித்தார். மேலும் லோக்பால் வரைவு மசோதாவில் தாம் சேர்த்துள்ள அம்சங்களுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு தரக்கோரி பாரதிய ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ், நிதீன்கட்காரி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத்சிங், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அண்ணாஹசாரே சந்தித்து பேசினார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அண்ணா ஹசாரே நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது லோக்பால் மசோதாவுக்கு தாம் சேர்த்துள்ள அம்சங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் அண்ணா ஹசாரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சோனியா காந்தியை சந்தித்து,பிரதமர், நீதிபதிகள் அதிகாரிகள் ஆகியோர்களை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகளை கலந்தாலோசனை செய்துவிட்டு முடிவு சொல்வதாக சோனியா காந்தி பதில் கூறினார். லோக்பால் மசோதாவுக்காக அரசு தரப்பிலும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சிவில் உறுப்பினர்களாக உள்ள நாங்களும் அம்சங்களை உருவாக்கி உள்ளோம்.இவை இரண்டையும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதித்து தேவையானவைகளை எடுத்துக்கொள்ளட்டும் என்று அண்ணா ஹசாரே கூறினார்.
இதற்கிடையில் லோக்பால் வரைவு மசோதா குறித்து கருத்துக்களை அறிந்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த சர்வகட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாவும் கலந்துகொள்ளும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கலந்துகொள்ளுமா, கலந்துகொள்ளாதா என்ற சந்தேகம் இருந்தது. அத்வானியின் இந்த அறிவிப்பின் மூலம் இந்த சந்தேகம் நீக்கப்பட்டுவிட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு லோக்பால் மசோதா குறித்த கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை முன்வைக்கப்படும் என்றும் அத்வானி மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.