LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.3 - லோக்பால் வரைவு மசோதா குறித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாவும் கலந்துகொள்ளும் என்று அதன் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அறிவித்துள்ளார்.
நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதை ஒழிக்கக்கோரி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காந்தீயவாதி அண்ணாஹசாரே சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனால் பயந்துபோன மத்திய அரசு, ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற உறுதி அளித்தது. இதனையொட்டி லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் அரசு தரப்பில் 5 பேரும் சிவில் பிரிவில் அண்ணா ஹசாரே தலைமையில் 5 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த இரண்டு பிரிவினரும் மசோதாவில் சேர்க்க வேண்டிய அம்சங்களை சேர்த்தன. லோக்பால் மசோதாவுக்கு பிரதமர், நீதிபதிகள், அதிகாரிகளையும் விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என்று சிவில் பிரிவு உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு பிரதிநிதிகளும் சிவில் பிரிவு உறுப்பினர்களும் 9 தடவைகள் சந்தித்து பேசினர். அப்போதும் இருதரப்பினர்களுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
இந்தநிலையில் வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என்று அண்ணா ஹசாரே அறிவித்தார். மேலும் லோக்பால் வரைவு மசோதாவில் தாம் சேர்த்துள்ள அம்சங்களுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு தரக்கோரி பாரதிய ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ், நிதீன்கட்காரி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத்சிங், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அண்ணாஹசாரே சந்தித்து பேசினார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அண்ணா ஹசாரே நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது லோக்பால் மசோதாவுக்கு தாம் சேர்த்துள்ள அம்சங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் அண்ணா ஹசாரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சோனியா காந்தியை சந்தித்து,பிரதமர், நீதிபதிகள் அதிகாரிகள் ஆகியோர்களை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகளை கலந்தாலோசனை செய்துவிட்டு முடிவு சொல்வதாக சோனியா காந்தி பதில் கூறினார். லோக்பால் மசோதாவுக்காக அரசு தரப்பிலும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சிவில் உறுப்பினர்களாக உள்ள நாங்களும் அம்சங்களை உருவாக்கி உள்ளோம்.இவை இரண்டையும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதித்து தேவையானவைகளை எடுத்துக்கொள்ளட்டும் என்று அண்ணா ஹசாரே கூறினார்.
இதற்கிடையில் லோக்பால் வரைவு மசோதா குறித்து கருத்துக்களை அறிந்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த சர்வகட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாவும் கலந்துகொள்ளும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கலந்துகொள்ளுமா, கலந்துகொள்ளாதா என்ற சந்தேகம் இருந்தது. அத்வானியின் இந்த அறிவிப்பின் மூலம் இந்த சந்தேகம் நீக்கப்பட்டுவிட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு லோக்பால் மசோதா குறித்த கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை முன்வைக்கப்படும் என்றும் அத்வானி மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
- எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
- அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும் : வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் வெஜிடபிள்![]() 18 hours 2 min ago |
தக்காளி ரசம்![]() 4 days 21 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 21 hours ago |
-
போதை பொருள் நடமாட்டத்திற்கு துணை போனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
10 Aug 2022சென்னை : போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் இன்று கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைகிறாரா?
10 Aug 2022கொழும்பு : இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆக. 14 வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
10 Aug 2022சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித
-
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
10 Aug 2022சென்னை : நடந்து முடிந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.
-
2-வது திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை : எரித்திரியாவில் விசித்திர சட்டம்
10 Aug 2022அசம்மாரா : ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும்.
-
எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு: தினகரன் பேட்டி
10 Aug 2022சென்னை : எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கோட் சூட் அணிய முடியாமல் தவித்த ஜோபைடனுக்கு உதவிய மனைவி
10 Aug 2022வாஷிங்டன் : கோட், சூட் அணிய முடியாமல் தவித்த அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு அவரது மனைவி உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
டோனியின் விக்கெட் கீப்பிங்: பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
10 Aug 2022எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
-
வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்து
10 Aug 2022சென்னை : துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்து கூறியுள்ளார்.
-
இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை வருகிறது
10 Aug 2022கொழும்பு : இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது.
-
வரலாறு படைத்த செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு செஸ் வீராங்கனை பாராட்டு
10 Aug 2022சென்னை : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காகத் தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
போதை விழிப்புணர்வு வாரம்: அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
10 Aug 2022சென்னை : போதை விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
சீனாவில் லங்கையா என்ற புதிய வகை வைரஸ் பரவல்
10 Aug 2022பெய்ஜிங் : சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.
-
நான் சாதித்து விட்டேன்: செஸ் வீராங்கனை ஹரிகா நெகிழ்ச்சி
10 Aug 2022மும்பை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று, தான் நினைத்ததைச் சாதித்து விட்டதாக நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய ஹரிகா தெரிவித்துள்ளா
-
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
10 Aug 2022மதுரை : எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
ஆசிரியர் தகுதி தேர்வு தேதி திடீர் மாற்றம்
10 Aug 2022சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
10 Aug 2022புதுடெல்லி : மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்திய அரசு விடுவித்திருக்கிறது.
-
ஆதார் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 2,000 நிதி விடுவிப்பு : தமிழக அரசு அறிவிப்பு
10 Aug 2022சென்னை : மத்திய அரசு வழிகாட்டுதல் படி, ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும் : வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
10 Aug 2022சென்னை : அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7--ம்தேதி வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமி
-
மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் : முதல்வராக பதவியேற்ற பின் நிதிஷ் பேட்டி
10 Aug 2022பாட்னா : 2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
பசி மற்றும் சுகாதார நெருக்கடி: காபூலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
10 Aug 2022காபூல் : தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.
-
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
10 Aug 2022ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்: பவானி தேவி தங்கம் வென்றார்
10 Aug 2022பர்மிங்காம் : காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் : செப். 6-ல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது
10 Aug 2022மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 11-08-2022.
11 Aug 2022