முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தே.மு.தி.க. தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தே.மு.தி.க. ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த இமயம் என்.எஸ். சிவக்குமார் நேற்று (2.7.2011) முதல் ஈரோடு தெற்கு மாவட்ட  செயலாளராக நியமிக்கப்படுகிறார். 

ஈரோடு தெற்கு மாவட்ட இணை பொறுப்பாளர்களாக செயல்பட்டு வந்த பா. கோபால் (மாவட்ட கழக துணை செயலாளர்),  பெ. தங்கமுத்து (மாவட்ட துணை செயலாளர்), எம். தனசண்முகமணி (மாவட்ட வர்த்தக அணி செயலாளர்),  பி. ஏசையன் (மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர்) ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து நேற்று (2.7.2011) முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.

ஈரோடு தெற்கு மாவட்ட துணை செயலாளர்களாக  எம். தனசண்முகமணி, பி. ஏசையன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளராக ஜி. விஜயகுமார், சூரம்பட்டி நகர செயலாளராக ஏ.பி. முத்துமேஸ்திரி, பெரிய சேமூர் நகர செயலாளராக எம். விஸ்வநாதன், வீரப்பன் சத்திரம் நகர  செயலாளராக எஸ். ஜெகதீசன் ஆகியோர் நேற்று (2.7.2011) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

தே.மு.க. நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் செயல்பட்டு வந்த ஜெ.ஜெ. ராஜ்குமார், நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆதி. இளஞ்செழியன், நாகை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பி. தவமணி ஆகியோர் அவரவர்கள் செயல்பட்டு வந்த பொறுப்பில் இருந்து நேற்று (2.7.2011) முதல் விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்