முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா மாநில பிரச்சனை: பொறுமையாய் இருக்குமாறு ப.சிதம்பரம் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை - 5 - தெலுங்கானா பிரச்சனையில் காங்கிரஸ் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து நெருக்கடி கொடுத்துவரும் சூழ்நிலையில் இவர்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனித்தெலுங்கானா மாநில பிரச்சனை முற்றிலும் உணர்வுப்பூர்வமான அதேநேரம் சிக்கலான ஒரு பிரச்சனையாகும். இந்த விஷயத்தில் இன்னும் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. எனவே ஆந்திர அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். இப்பிரச்சனையில் ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அது தொடர அனைவரும் அனுமதிக்க வேண்டும். ஆலோசனைகள் முடிந்த பிறகு மத்திய அரசின் கருத்துக்கள் வெளியிடப்படும். நாங்கள் அனைவரையும் கேட்டுத்தான் ஒரு முடிவுக்கு வருவோம். பலதரப்பட்ட மக்களின் கருத்துக்கள் இதில் தேவை. இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. ஆகவே யாரும் அவசரப்படவேண்டாம். அவசரப்பட்டு நெருக்கடி கொடுக்கவும் வேண்டாம். எனவே நிலைமையை புரிந்துகொள்ளுமாறு பொதுமக்களையும் குறிப்பாக மீடியாக்களை கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு ப.சிதம்பரம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்