எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 6 - மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்அமைச்சர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். முதல்வராக பதவி ஏற்ற பின்பு ஜெயலலிதா இரண்டாவது முறையாக இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்தில் முந்தை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் தேவையில்லாத செலவு, ஊழல் ஆகியவைகளின் காரணமாக தமிழகத்தை பெரும் கடனாளி மாநிலமாகிவிட்டது. புதிய தலைமை செயலகம் கட்டுவதாக கூறி ரூ. 1000 கோடி வீணாகிவிட்டதாக தெரிகிறது. இவ்வளவு செலவு செய்தும் அங்கு சட்டசபை கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் போது வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியாமல் அவைகள் முடங்கிப்போய் கிடந்தன. மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்குடன் இருந்ததால் தமிழகத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மின்தட்டுபாடு நிலவியது. இதை போக்க வேண்டுமென்றால் மின்சார உற்பத்தியை பெருக்க பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இந்தநிலையில்
மத்திய திட்டக்குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த முதல்அமைச்சர் அல்லது அவர்கள் சார்பில் நிதி அமைச்சர் கலந்துகொள்வார்கள். அவர்கள் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களுக்கும் அடுத்து செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கும் தேவையான நிதி மற்றும் மத்திய அரசு வழங்கும் நிதி குறித்து கூட்டத்தில் வலியுறுத்துவார்கள்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதல் முதலாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் 2011-2012ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான (2011-2012) திட்டக்குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்குமாறு திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொள்வார். கடந்த நிதி ஆண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதல் நிதி ஒதுக்குமாறும் முதல்அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 14ந் தேதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கு மத்திய மின்தொகுப்பில் இருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதோடு, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மானியம் தேவை என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மோனோ ரெயில் திட்டம், தமிழக நதிகள் இணைப்பு, சிறப்பு பொதுவினியோக திட்டம் உள்பட பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்திட மத்திய அரசு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது, 2-ம் முறையாக முதல்அமைச்சர் ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை டெல்லி செல்லும் அவர், மாலையே சென்னை திரும்புகிறார். அவருடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோரும் உடன் செல்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.