முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிலானி மீதான தேசதுரோக வழக்கு:விசாரணை இன்னும் முடியவில்லை

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.- 6 - காஷ்மீர் பிரிவினைவாதி கிலானி, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் 4 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேசதுரோக வழக்கு தொடர்பாக விசாரணையை இன்னும் முடிக்கவில்லை என்று டெல்லி கோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பிரிவினைவாத தலைவர் கிலானி மற்றும் அருந்ததிராய் உள்பட 6 பேர் பேசும்போது இந்தியாவிற்கு எதிராக பேசினர். அவர்களின் பேச்சு காஷ்மீரை பிரிப்பதற்கு ஆதரவு அளிப்பது போன்று இருந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி மெட்ரோபாலிடன்  மாஜிஸ்திரேட்  கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது திலக் மார்க் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முகேஷ் வாலியா ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில் கிலானி உள்பட 6 பேர் மீதான வழக்கு தேச துரோக குற்றச்சாட்டு குறித்து விசாரணை  இன்னும் முடியவில்லை என்றனர். இதனையொட்டி விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் விசாரணை குறித்த தற்போதுள்ள நிலையை அறிக்கையாக கோர்ட்டில் காவல் நிலைய போலீசாருக்கு நீதிபதி நவீதா குமாரி பாஹா உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்