எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.1 - மத்திய பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 1.60 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயது மற்றும் அதற்கு மேல் வயது உள்ளவர்களுக்கு வரிசலுகை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமகனுக்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:
தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பு ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் முதியவர்களான அதாவது 80 வயதிலும் அதற்கு மேலும் உள்ளவர்களுக்கு வரிசலுகைகள் அளிக்கப்படும். தற்போது மூத்த குடிமக்களுக்கான வயது 65 ஆக இருக்கிறது. இதை 60 ஆக குறைக்கப்படும்.
தனிநபர் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வரி செலுத்துபவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் மிச்சமாகும். மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் மூத்த குடிமக்களுக்கு அதாவது 80 வயதிற்கும் மேல் உள்ளவர்களுக்கு வருமானவரிவிலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயத்தில் சேவை துறை விரிவாக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் மூலம் பயணம் செய்தல், ஸ்டார் ஓட்டலில் தங்குபவர்கள் மற்றும் குளிர்சாதன வசதியுள்ள ரெஸ்டாரண்ட்களில் மதுபானம் குடிப்பவர்களுக்கு செலவு அதிகமாகலாம். பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மேலும் வரி சலுகை கிடைக்கும்.
நாட்டில் பணவீக்கம் குறைந்தாலும் இன்னும் கவலை அளிக்கக்கூடிய வகையில்தான் இருக்கிறது. அதேசமயத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையாலும் நடவடிக்கையாலும் வரும் மாதங்களில் பணவீக்கம் குறையலாம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு சராசரி பணவீக்க சதவீதம் குறைவாக இருக்கும். நாட்டில் உணவு பணவீக்கம் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20.4 சதவீதமாக இருந்தது.
இது படிப்படியாக குறைந்து கடந்த ஜனவரி மாதம் 9.3 சதவீதத்திற்கு வந்துவிட்டது. பல்வேறு இடையூறுகளுக்கும் இடையே இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் தேவை மற்றும் சப்ளை விகித்தை சரிக்கட்ட வேண்டும். நடப்பு நதியாண்டில் முதல் அறையாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது.
நீண்டகாலமாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் பொருள்கள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை செயல்படுத்தும் வகையில் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும்.
ஜிஎஸ்டி முறையை வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதியில் இருந்து அமுல்படுத்தப்படவிருந்தது. ஆனால் அதற்கான திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாமல் இருந்தது. இந்த மசோதா நிறைவேற வேண்டுமென்றால் பாராளுமன்ற இருசபைகளிலும் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி வேண்டும். இந்த மசோதா நிறைவேறினால் பாராளுமன்றத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கும் அதிகாரம் கிடைக்கும்.
விவசாயம் மற்றும் சேவை துறைகளில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் கடந்த டிசம்பர் மாதம் முடிய 9 மாதத்தில் வளர்ச்சி விகிதம் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதத்தில் இருந்து 1.6 சதவீதம் குறைந்திருந்தது. முதலீடு, இன்சூரன்ஸ், ரியல் ஸ்டேட், வர்த்தக சேவைகளில் கடந்த டிசம்பர் மாதம் முடிய வளர்ச்சி விகிதம் 11.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதம் வெறும் 8.5 சதவீதமாக இருந்தது. மின்சார துறை, கியாஸ், மற்றும் தண்ணீர் சப்ளை ஆகிய சேவைதுறையிலும் வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏழைகளுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழைகளுக்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மான்யங்கள் சரியாக அவர்களுக்கு போய் சேருவதில்லை. இந்த மான்யங்கள் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழைகளுக்கு மண்ணெண்ணெய் மான்யம் மற்றும் உரம் மான்யதுக்கான பணம் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இது அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் அமுல்படுத்தப்படும். மண்ணெண்ணெய்,கியாஸ், மற்றும் உர விநியோகம் சரியான முறையில் கிடைக்க இந்த வழிவகையை கையாளப்படும். இதற்கான விதிமுறைகளை நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு உருவாக்கி வருகிறது. இதன் இடைக்கால அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
மத்திய எக்சைஸ் வரியை கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் அளவுக்கு குறைக்க முடியாது. 10 சதவீத எக்சைஸ் வரி தொடரும். மேலும் 130 வகையான பொருட்களுக்கு ஒரு சதவீத எக்சைஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் அடிப்படை தேவையான உணவு மற்றும் எரிபொருள்களுக்கு வரிவிலக்கு தொடரும். தங்கம் மற்றும் வைர கற்கள் புதிய வரிவிதிப்புக்கு உட்படாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.