எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.1 - மத்திய பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 1.60 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயது மற்றும் அதற்கு மேல் வயது உள்ளவர்களுக்கு வரிசலுகை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமகனுக்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:
தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பு ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் முதியவர்களான அதாவது 80 வயதிலும் அதற்கு மேலும் உள்ளவர்களுக்கு வரிசலுகைகள் அளிக்கப்படும். தற்போது மூத்த குடிமக்களுக்கான வயது 65 ஆக இருக்கிறது. இதை 60 ஆக குறைக்கப்படும்.
தனிநபர் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வரி செலுத்துபவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் மிச்சமாகும். மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் மூத்த குடிமக்களுக்கு அதாவது 80 வயதிற்கும் மேல் உள்ளவர்களுக்கு வருமானவரிவிலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயத்தில் சேவை துறை விரிவாக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் மூலம் பயணம் செய்தல், ஸ்டார் ஓட்டலில் தங்குபவர்கள் மற்றும் குளிர்சாதன வசதியுள்ள ரெஸ்டாரண்ட்களில் மதுபானம் குடிப்பவர்களுக்கு செலவு அதிகமாகலாம். பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மேலும் வரி சலுகை கிடைக்கும்.
நாட்டில் பணவீக்கம் குறைந்தாலும் இன்னும் கவலை அளிக்கக்கூடிய வகையில்தான் இருக்கிறது. அதேசமயத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையாலும் நடவடிக்கையாலும் வரும் மாதங்களில் பணவீக்கம் குறையலாம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு சராசரி பணவீக்க சதவீதம் குறைவாக இருக்கும். நாட்டில் உணவு பணவீக்கம் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20.4 சதவீதமாக இருந்தது.
இது படிப்படியாக குறைந்து கடந்த ஜனவரி மாதம் 9.3 சதவீதத்திற்கு வந்துவிட்டது. பல்வேறு இடையூறுகளுக்கும் இடையே இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் தேவை மற்றும் சப்ளை விகித்தை சரிக்கட்ட வேண்டும். நடப்பு நதியாண்டில் முதல் அறையாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது.
நீண்டகாலமாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் பொருள்கள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை செயல்படுத்தும் வகையில் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும்.
ஜிஎஸ்டி முறையை வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதியில் இருந்து அமுல்படுத்தப்படவிருந்தது. ஆனால் அதற்கான திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாமல் இருந்தது. இந்த மசோதா நிறைவேற வேண்டுமென்றால் பாராளுமன்ற இருசபைகளிலும் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி வேண்டும். இந்த மசோதா நிறைவேறினால் பாராளுமன்றத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கும் அதிகாரம் கிடைக்கும்.
விவசாயம் மற்றும் சேவை துறைகளில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் கடந்த டிசம்பர் மாதம் முடிய 9 மாதத்தில் வளர்ச்சி விகிதம் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதத்தில் இருந்து 1.6 சதவீதம் குறைந்திருந்தது. முதலீடு, இன்சூரன்ஸ், ரியல் ஸ்டேட், வர்த்தக சேவைகளில் கடந்த டிசம்பர் மாதம் முடிய வளர்ச்சி விகிதம் 11.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதம் வெறும் 8.5 சதவீதமாக இருந்தது. மின்சார துறை, கியாஸ், மற்றும் தண்ணீர் சப்ளை ஆகிய சேவைதுறையிலும் வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏழைகளுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழைகளுக்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மான்யங்கள் சரியாக அவர்களுக்கு போய் சேருவதில்லை. இந்த மான்யங்கள் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழைகளுக்கு மண்ணெண்ணெய் மான்யம் மற்றும் உரம் மான்யதுக்கான பணம் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இது அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் அமுல்படுத்தப்படும். மண்ணெண்ணெய்,கியாஸ், மற்றும் உர விநியோகம் சரியான முறையில் கிடைக்க இந்த வழிவகையை கையாளப்படும். இதற்கான விதிமுறைகளை நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு உருவாக்கி வருகிறது. இதன் இடைக்கால அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
மத்திய எக்சைஸ் வரியை கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் அளவுக்கு குறைக்க முடியாது. 10 சதவீத எக்சைஸ் வரி தொடரும். மேலும் 130 வகையான பொருட்களுக்கு ஒரு சதவீத எக்சைஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் அடிப்படை தேவையான உணவு மற்றும் எரிபொருள்களுக்கு வரிவிலக்கு தொடரும். தங்கம் மற்றும் வைர கற்கள் புதிய வரிவிதிப்புக்கு உட்படாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு