தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.12 - தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க இடமாற்றம் செய்யப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் கோயிலை மீண்டும் அதே இடத்தில் புனரமைத்து வழிப்பட தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை பொது நிதியிலிருந்து ரூ.18.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் திருக்கோயில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோயிலில், ஆலமரத்தின் அடிப்பாகத்தில் இயற்கையாகவே விநாயகர் எழுந்தருளியுள்ளதால் ஆலமர இயற்கை விநாயகர் என்ற பெயரைப் பெற்றது. இத்திருக்கோயிலுக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குடியிருப்போர் மட்டுமின்றி வெளியிடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு புதிய சட்டமன்றப் பேரவை வளாகம் கட்ட அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ள இடம் தேவை என்பதால் இத்திருக்கோயிலை வேறு இடத்திற்கு மாற்றியமைப்பது குறித்து கடந்த அரசால் ஆராயப்பட்டது. இதற்கிடையில், தற்போதுள்ள இயற்கை விநாயகர் ஆலமரத்தில் இயற்கையாக உருவான விநாயகர் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள ஆலய இடம் ஆகியவற்றை மாற்றியமைப்பதை எதிர்த்து 29.8.2008 அன்று பொது நல வழக்கு nullபேராணை மனு எண்.21621/2008 மற்றும் பலவகை மனு எண்.1/2008 சென்னை உயர்நீnullதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ்வழக்கு குறித்து விசாரித்த முதன்மை அமர்வு nullநீதிமன்றம், 4.9.2008 அன்று பொது நல வழக்கு தாக்கல் செய்த மனுதாரர், 29.8.2008 அன்று பொதுப்பணித் துறை செயலாளரிடம் அளித்துள்ள மனுவினைப் பரிசீலித்து ஆணை பிறப்பிக்குமாறு தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் 11.11.2008 அன்று அரசு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் திருக்கோயிலில் உள்ள இயற்கையாக தோன்றிய ஆலமர விநாயகரை அப்படியே விட்டு விட்டு, அதனைச் சுற்றிலும் சுமார் 6 அடி சுற்றளவிற்கு வேலி அமைத்துக் கொடுக்கவும், 2400 சதுர அடி இடத்தை பெயரளவு வாடகையில் ஒதுக்கீடு செய்யவும் ஆணையிட்டது. மேலும், இத்திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்தில் இந்து சமய அறநிலையத் துறையே அவர்களின் நிதி ஆதாரத்திலிருந்து மேற்படி கோயிலை கட்டிக் கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் இந்த ஆலமர இயற்கை விநாயகரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த விஷ்ணு, துர்கை, சரஸ்வதி, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் போன்ற 23 பரிவார மூர்த்திகளை அகற்றி, பொதுப்பணித் துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது. இவ்வாறு இயற்கை ஆலமர விநாயகர் ஒரு இடத்திலும், ஏனைய பரிவார மூர்த்திகள் வேறு ஒரு இடத்திலும் அமையப் பெறுவது வழிபாட்டுக்கு உகந்ததல்ல என பக்தர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இத்திருக்கோயிலை புனரமைத்திடவும், பரிவார மூர்த்திகளை ஆகம விதிகளின்படி மீண்டும் நிர்மாணம் செய்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் உத்தரவின்படி, 23 பரிவார மூர்த்திகளையும் மீண்டும் நிர்மாணிக்கவும், கருவறை, நுழைவு வாயில், அம்பாள் சமேத சிவன், நவக்கிரக சன்னதி ஆகியவற்றை அமைப்பதோடு, மேற்கூரையும், தரைத்தளமும் அமைக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வலம் வந்து ஆலமர இயற்கை விநாயகரையும், பரிவார மூர்த்திகளையும் வழிபடத்தக்க வகையிலும், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தத் திருப்பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகையான 18.50 லட்சம் ரூபாயும் இந்து சமய அறநிலையத் துறை பொது நல நிதியிலிருந்து வழங்கப்படும்.இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: மனு தாக்கல் தொடங்கியது
05 Jul 2022புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்று தொடங்கியது.மனுதாக்கல் செய்ய வருபவர்களின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு