முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் அபகரிப்பு: சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் மீது புகார்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஜூலை 11, ரூ 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து கொலைமிரட்டலும் விடுவதாக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனிடம் ஆதரவாளர்கள் மீது பெண் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரத்தை சேர்ந்தவர் மலையாண்டி நாடார். இவருக்கு சொந்தமான சொத்துக்கள் இவருக்கு பிறகு இவரது மகள் கோகிலாவுக்கு சொந்தமாக இருந்து வந்த ரூ 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அவர் திருமணமாகி வெளியூரில் இருந்ததை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் ஆதரவாளர்களான எமனேசுவரத்தை சேர்ந்த பழனிச்சாமி, கந்தம்மாள், வே.பழனிச்சாமி, சோமு, வெள்ளைச்சாமி, சிவகாமி, கருப்பையா ஆகியோர் சுப.தங்கவேலன் உதவியுடன் ஆவணங்களை தயார் 

செய்து அபகரித்துள்ளனர். இதனை அறிந்து தட்டிக் கேட்ட கோகிலாவுக்கு 

கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது திமுக ஆட்சி நடந்து வந்ததால் புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட கோகிலா நேற்று மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியனிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில் மோசடி செய்து அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை 

பெற்றுத் தர வேண்டும் என்றும், இல மோசடியில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்