முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி பத்திரம் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு: 3 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.12​- சேலம் அருகே ரூ.8 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் தயார் செய்து அபகரித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு நில அபகரிப்பு மோசடிகள் அதிகம் நடைப்பெற்றன. இது குறித்து அப்போது போலீசில் புகார் கொடுத்தார். தி.மு.க.வினர் அதன் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்து வந்தனர். அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க தனி போலீஸ் பிரிவு அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு மீட்டு பிரிவிற்கு இதுவரை 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் வந்துள்ளன. இதில் பல்வேறு வழக்குகளை விசாரணை நடத்தி தி.மு.க.கவுன்சிலர்கள் உள்பட பலரை கைது செய்துள்ளனர். பல புகார்களில் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஜனார்த்தனன் என்பவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது.சேலம் மாவட்டம் சங்ககிரி அக்கமாப்பேட்டையில் 86 சென்ட் நிலம் கடந்த 1961 ஆம் ஆண்டு முதல் ஆராயம்மாள் என்பவரின் பெயரில் இருந்து வந்தது. அவரின் உயிலின் அடிப்படையில் அந்த நிலம் 1993 ஆம் ஆண்டு முதல் எனது மனைவி யசோதா,எனது  அண்ணன் மகன் சரவணன் ஆகியோர் பெயரில் உள்ளது.

இந்த நிலத்தை பள்ளிபாளையத்தைச் சேர்ந்த லட்சுமண முதலியார் என்பவரின் மகன்கள் வெங்கடாஜலம்,வரதராஜன்,நாகப்பன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கந்தசாமி என்பவருக்கு போலி பத்திரம் தயார் செய்து விற்று விட்டனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.8 கோடியாகும். இந்த நிலத்தை விற்பனை செய்த 3 பேரின் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கேட்டுக்கொண்டார்.

அந்த மனுமீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்திக்கு உத்தரவிட்டார். அவர் இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நிலம் மோசடி செய்து விற்பனை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் வெங்கடாஜலம், வரதராஜன் மற்றும் நாகப்பனை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago