முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடம் ஆக்கிரமிப்பு: நெல்லை தி.மு.க. செயலாளர் உறவினர் மீது புகார்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை ஜூலை-12 - நெல்லையில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு போர்டுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நெல்லை மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளரின் உறவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வக்பு போர்டுக்கு சொந்தமான இடத்தை உடனடியாக மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 

நெல்லை கலெக்டரை சந்தித்து நேற்று புகார் மனுக்கொடுத்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: நெல்லை அருகேயுள்ள பேட்டையில் உள்ளது நவாப் வாலஜா பள்ளிளவாசல். சேரன்மகாதேவி சாலையில் உள்ள இந்த பள்ளிவாசலுக்கு ரூபாய் பல கோடி மதிப்புள்ள 

சொத்துக்கள் உள்ளது. நகரத்தின் மைய பகுதியில் உள்ள இந்த இடத்தில் ஒரு திருமண மண்டபம் மற்றும் 36 கடைகள் உள்ளது. இவைகள் அனைத்துமே தமிழக வக்புபோர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2004ம் ஆண்டு பேட்டை பகுதியில் வசித்துவரும் ஸ்டாலின் பாண்டியன் என்பவரும், அவரது மகன் முத்துக்குமார் என்பவரும் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.மேலும் பள்ளிவாசலுக்கு சேரவேண்டிய தொகையை ரூ.1கோடிக்குமேல் மோசடி செய்துவிட்டனர். இது குறித்து தமிழக வக்புபோர்டுக்கும், மாவட்ட வருவாய்துறைக்கும் பல முறை புகார் மனுக்கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் எங்கள் நிர்வாக கமிட்டி தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பணபலம் மற்றும் அரசியல் பலத்தால் தடுத்து நிறுத்திவிட்டனர். எனவே புதிய அரசு ஆக்கிரமிப்பாளர்கள் மீது தக்கநடவடிக்கைகள் மேற்கொண்டு வக்பு போர்டுக்கு சொந்தமான இடத்தை உடனடியாக மீட்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். வக்புபோர்டுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்டாலின் பாண்டியன் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் நெருங்கிய உறவினர் ஆவார். இதுகுறித்து மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பாளை ரபீக் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பேட்டையில் உள்ள நவாப் வாலஜா பள்ளிவாசலுக்கு சொந்தமான பலகோடிரூபாய் மதிப்புள்ள நிலத்தை பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் பாண்டியன், மற்றும் அவரது மகன் முத்துக்குமார் என்பவரும் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துகொண்டனர். வக்புபோர்டுக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்க வக்புபோர்டுக்கும், மாநில வருவவாய் துறையிடமும் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஸ்டாலின் பாண்டியன் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பாசாமி பாண்டியனின் நெருங்கிய உறவினர் என்பதால் தனது பணபலம், மற்றும் அரசியல் பலத்தால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவிடாமல் தடுத்துவிட்டார். எனவே புதிய அரசு ஆக்கிரமிப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வக்புபோர்டுக்கு சொந்தமான இடத்தை உடனடியாக  மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago