எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.13 - மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்பட புதியதாக 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தயாநிதிமாறன் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான தயாநிதி மாறனும் ஏர்செல் நிறுவனம் விற்பனை விவாகரத்தில் ராஜினாமா செய்துவிட்டார். மேலும் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் 3 கேபினட் அமைச்சர்கள் பதவி காலியாக இருந்தது. அதனால் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மன்மோகன் சிங் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்தும் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்வதையும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று மத்திய அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றி அமைத்தார்.
4 பேருக்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கிஷோர் சந்திர தியோ மலைவாழ் மக்கள் நலம் மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பெனி பிரசாத் வர்மா, எஃகு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் திவேரி ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்தி இலாகாவை மம்தா பானர்ஜி வைத்திருந்தார். அவரது கட்சிக்காரருக்கே இந்த இலாகா மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷ் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்த 4 கேபினட் அமைச்சர்களை தவிர மேலும் 4 இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் முதலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தவர். ஸ்ரீகாந்த் ஜெனா,புள்ளி இயல் திட்ட அமுலாக்க, இரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவன் சிங் கெடோவர், வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைச்சர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதீப் பந்தோப்த்யாயா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சரண்தாஸ் மகந்த், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிதேந்திர சிங்,உள்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மிலிந்த் தியோரா,தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள முரளி தியோராவின் மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் சுக்லா, பாராளுமன்ற விவகாரத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சில மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விலாஸ் ராவ் தேஷ்முக்( அறிவியல், தொழில் நுட்பம்) வீரப்பமொய்லி (கம்பெனி விவகாரம்) ஆனந்த் சர்மா (வணிகம்,தொழில், கூடுதல் பொறுப்பாக ஜவுளித்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது) பி.கே.பன்சால்(பாராளுமன்ற விவகாரம். இவர் நீர்வளத்துறையும் கூடுதலாக கவனிப்பார்) சல்மான் குர்ஷீத் (சட்டம், நீதி. இவர் சிறுபான்மையினர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார்) இ.அகமது வெளியுறவுத்துறை மற்றும் மனிதவளத்துறை மேம்பாடு) புதுவையை சேர்ந்த நாராயணசாமி ( தனிநபர் நலன், பென்சன்,மக்கள் குறை தீர்ப்பு பிரதமர் அலுவலகம்) ஹரீஸ் ரவுத் (விவசாயம்,உணவு பதப்படுத்தும் தொழில், பாராளுமன்ற விவகாரம்) முகுல்ராய் (கப்பல்துறை) அஸ்வினி குமார் (திட்டம், அறிவியல், தொழில்நுட்பம்)
இந்த நிலையில் ராஜினாமா செய்த தயாநிதிமாறன், முரளி தியோரா,ஹண்டிக், காந்திலால் புரியா ஆகியோர்களின் அமைச்சர் பதவி ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மேலும் மத்திய அமைச்சர்கள் எம்.எஸ்.கில், சாய் பிரதாப், அருண் எஸ்.யாதவ் ஆகியோர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்கிவிட்டார்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாலை சரியாக 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், கபில் சிபல் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.