LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.13 - மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்பட புதியதாக 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தயாநிதிமாறன் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான தயாநிதி மாறனும் ஏர்செல் நிறுவனம் விற்பனை விவாகரத்தில் ராஜினாமா செய்துவிட்டார். மேலும் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் 3 கேபினட் அமைச்சர்கள் பதவி காலியாக இருந்தது. அதனால் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மன்மோகன் சிங் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்தும் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்வதையும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று மத்திய அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றி அமைத்தார்.
4 பேருக்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கிஷோர் சந்திர தியோ மலைவாழ் மக்கள் நலம் மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பெனி பிரசாத் வர்மா, எஃகு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் திவேரி ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்தி இலாகாவை மம்தா பானர்ஜி வைத்திருந்தார். அவரது கட்சிக்காரருக்கே இந்த இலாகா மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷ் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்த 4 கேபினட் அமைச்சர்களை தவிர மேலும் 4 இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் முதலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தவர். ஸ்ரீகாந்த் ஜெனா,புள்ளி இயல் திட்ட அமுலாக்க, இரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவன் சிங் கெடோவர், வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைச்சர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதீப் பந்தோப்த்யாயா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சரண்தாஸ் மகந்த், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிதேந்திர சிங்,உள்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மிலிந்த் தியோரா,தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள முரளி தியோராவின் மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் சுக்லா, பாராளுமன்ற விவகாரத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சில மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விலாஸ் ராவ் தேஷ்முக்( அறிவியல், தொழில் நுட்பம்) வீரப்பமொய்லி (கம்பெனி விவகாரம்) ஆனந்த் சர்மா (வணிகம்,தொழில், கூடுதல் பொறுப்பாக ஜவுளித்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது) பி.கே.பன்சால்(பாராளுமன்ற விவகாரம். இவர் நீர்வளத்துறையும் கூடுதலாக கவனிப்பார்) சல்மான் குர்ஷீத் (சட்டம், நீதி. இவர் சிறுபான்மையினர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார்) இ.அகமது வெளியுறவுத்துறை மற்றும் மனிதவளத்துறை மேம்பாடு) புதுவையை சேர்ந்த நாராயணசாமி ( தனிநபர் நலன், பென்சன்,மக்கள் குறை தீர்ப்பு பிரதமர் அலுவலகம்) ஹரீஸ் ரவுத் (விவசாயம்,உணவு பதப்படுத்தும் தொழில், பாராளுமன்ற விவகாரம்) முகுல்ராய் (கப்பல்துறை) அஸ்வினி குமார் (திட்டம், அறிவியல், தொழில்நுட்பம்)
இந்த நிலையில் ராஜினாமா செய்த தயாநிதிமாறன், முரளி தியோரா,ஹண்டிக், காந்திலால் புரியா ஆகியோர்களின் அமைச்சர் பதவி ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மேலும் மத்திய அமைச்சர்கள் எம்.எஸ்.கில், சாய் பிரதாப், அருண் எஸ்.யாதவ் ஆகியோர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்கிவிட்டார்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாலை சரியாக 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், கபில் சிபல் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
- எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
- அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும் : வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் வெஜிடபிள்![]() 1 day 2 min ago |
தக்காளி ரசம்![]() 5 days 3 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 3 hours ago |
-
ஆக. 14 வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
10 Aug 2022சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித
-
டோனியின் விக்கெட் கீப்பிங்: பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
10 Aug 2022எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
-
இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை வருகிறது
10 Aug 2022கொழும்பு : இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 11-08-2022.
11 Aug 2022 -
வரலாறு படைத்த செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு செஸ் வீராங்கனை பாராட்டு
10 Aug 2022சென்னை : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காகத் தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
போதை விழிப்புணர்வு வாரம்: அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
10 Aug 2022சென்னை : போதை விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
நான் சாதித்து விட்டேன்: செஸ் வீராங்கனை ஹரிகா நெகிழ்ச்சி
10 Aug 2022மும்பை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று, தான் நினைத்ததைச் சாதித்து விட்டதாக நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய ஹரிகா தெரிவித்துள்ளா
-
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
10 Aug 2022மதுரை : எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
10 Aug 2022புதுடெல்லி : மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்திய அரசு விடுவித்திருக்கிறது.
-
காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்: பவானி தேவி தங்கம் வென்றார்
10 Aug 2022பர்மிங்காம் : காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
-
அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும் : வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
10 Aug 2022சென்னை : அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7--ம்தேதி வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமி
-
மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் : முதல்வராக பதவியேற்ற பின் நிதிஷ் பேட்டி
10 Aug 2022பாட்னா : 2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
10 Aug 2022ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
17-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா
10 Aug 2022சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பிறந்த நாளன்று தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
பானிபட்டில் அடுத்த தலைமுறைக்கான எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
10 Aug 2022பானிபட் : பானிபட்டில் 2-ஜி எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பானிபட் எத்தனால் தொழிற்சாலையால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் : செப். 6-ல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது
10 Aug 2022மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
நிதீஷ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
10 Aug 2022சென்னை : பீகாரில் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொதுமக்கள் கடும் அதிர்ச்சி: இலங்கையில் 246 சதவீதம் அதிகரித்த மின் கட்டணம்
10 Aug 2022கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மின் கட்டணம் 246 சதவீதம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
ரூ. 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள டெஸ்லா நிறுவன பங்குகளை விற்றார் எலான் மஸ்க்
10 Aug 2022வாஷிங்டன் : இந்திய மதிப்பில் சுமார் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை மஸ்க் விற்றுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்
10 Aug 2022புதுடெல்லி : நீதிபதி உதய் உமேஷ் லலித், ஆகஸ்ட் 27-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
-
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு காரணம் தி.மு.க. : சசிகலா குற்றச்சாட்டு
10 Aug 2022சென்னை : அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தி.மு.க. தான் காரணம் என சசிகலா கூறினார்.
-
மத்திய அரசு ஒப்புதல் இல்லை: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு
10 Aug 2022புதுச்சேரி : முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததால் கவர்னர் உரையுடன் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது
-
8-வது முறையாக பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு : துணை முதல்வர் ஆனார் தேஜஸ்வி
10 Aug 2022பாட்னா : பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
-
நாட்டின் 14-வது புதிய துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜகதீப் தங்கர் : ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
10 Aug 2022புதுடெல்லி : துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்ததை அடுத்து நாட்டின் 14-வது புதிய துணை ஜனாதிபதியாக ஜகதீப் தன்கருக்கு இன்று பதவியேற்
-
இந்தியாவில் 16,047 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
10 Aug 2022புதுடெல்லி : இந்தியாவில் 16,047 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.