எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.13 - சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று முடிவுக்கு வந்தது. இதற்கான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்சில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விடுதலை, செல்வம் மற்றும் புருஷோத்தம் ஆகியோர் நேற்று வாதங்களை முன்வைத்தனர்.
இதன்பிறகு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடும்போது, கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் உருவாக்கியபோது என்.சி.இ.ஆர்.டி.யின் வழிகாட்டுதலை பின்பற்றவில்லை. தி.மு.க. அரசு அமைத்த நிபுணர் குழுவில் பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் பள்ளி கல்வி தொடர்பான பாடத்திட்டத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.
11.11.2010 அன்று ஒரே நாளில் சட்டப்பேரவையில் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களும், புத்தகங்களும் முடிவு செய்துள்ளார்கள். போதிய அவகாசம் இன்றி குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டதால் இது தரமற்றதாக இருக்கிறது.
தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். எனவே, தான் கல்வியின் முக்கியத்துவம் கருதி, இந்த ஆண்டில் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சமச்சீர் கல்வி குறித்து கேபினட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.
சமச்சீர் கல்வி வேண்டாம் என்பதல்ல எங்கள் நோக்கம். குறைபாடுகளை நீக்கியபிறகு இத்திட்டத்தை செயல்படுத்திவிடுவோம்.
இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தமிழக அரசுக்கு ஆதரவாக வாதாடுகையில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த போதிய அவகாசம் இல்லாமல் அவசர கதியில் கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தை திருத்தி அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய கல்வி சட்டத்திற்கு ஏற்ப சமச்சீர் கல்வி திட்டத்தில் பாடங்கள் உருவாக்கப்படவில்லை.
9 கோடி மாணவர்களுக்காக ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதைவிட தரமான கல்வி முக்கியம் என்பதனை மறந்துவிடக்கூடாது. சமச்சீர் கல்வி திட்டமே இப்போது விவாதத்திற்குரிய பொருளாகிவிட்டது. சமச்சீர் கல்வியில் என்.சி.ஈ.ஆர்.டி. வரையறுத்துள்ள தகுதி இல்லை. மாணவர்களின் படைப்பாற்றலையோ, திறனையோ வளர்க்கக்கூடியதாக இல்லை.
சமச்சீர் கல்வி குறித்து தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருமே கல்வியாளர்கள் தான். அதில் குறிப்பாக இருவர் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் நடத்துவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இருவரும் மெட்ரிக் பள்ளிகளும் நடத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனரும் மாநில பாடத்திட்டத்தின் சார்பில் இடம்பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறும்போது, 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் மட்டும் இப்போது சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவதாலும், மற்ற வகுப்பினருக்கு பழைய பாடத்திட்டங்களே நடத்துவதாலும் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது. எனவே, 1 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்திலேயே நடத்த வேண்டும் என்றார்.
அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி இக்பால், இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. தீர்ப்பு நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஏதேனும் தாக்கல் செய்ய விரும்பினால் நாளைக்குள்(இன்றைக்குள்) பதிவு செய்யலாம். அதற்கு அரசு பதில் தர வேண்டியதில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.