முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பானிகளுக்கு போடப்பட்ட பட்ஜெட் - சேதுராமன்

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.1 - அம்பானிகளுக்கு போடப்பட்ட பட்ஜெட் என்று டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்திருக்கிற விலைவாசியை குறைப்பதற்கான எந்தவிதமான புதிய அறிவிப்பும் இல்லை. தேசத்தின் மிகப்பெரிய தொழிலான விவசாயத் தொழில் மேம்பட நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப புதிய வேளாண்மைக் கொள்கைகள் எதையும் வெளிப்படுக்காத இந்த பட்ஜெட் ஏழை மக்களை, விவசாயிகலை ஏமாற்றும் பட்ஜெட் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

வருமானவரி விலக்கு உச்சவரம்பு 1.80 லட்சம் உயர்வு, தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்க சலுகை, ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் வளர்ச்சி மையத்துக்கு 20 கோடி ஒதுக்கீடு, சுயஉதவிக்குழுக்களுக்கு நிதியுதவி கூடுதலாக வழங்கிட 500 கோடி திரட்ட திட்டம் என பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், கடந்த முறை அறிவித்தபடி பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்கிற அறிவிப்பிற்கு எந்த விதமாக முயற்சிகளும் இல்லை. பணவீக்கம் அச்சுறுத்துகிறது என்று அறிவித்துள்ள நிதியமைச்சர் அதிலிருந்து எப்படி இந்திய தேசத்தை மீட்கப்போகிறோம் என்கிற செயல் திட்டத்தை உருவாக்கவில்லை.

வெளிநாட்டில் வாழ் இந்தியர்கள், அவர்கள் வாழும் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் போது குறிப்பாக எகிப்து, லிபியா கலவரத்தில் இந்தியா திரும்பியவர்களுக்கு வேலை உத்திரவாதமோ, சுய தொழிலில் ஈடுபட வழி செய்யும் எந்தவித திட்டமும் இல்லை. 592 தமிழக மீனவர்களை கொடூரமாக கொலை செய்த இலங்கை ராணுவத்திடமிருந்து தமிழக மீனவர்கள் பாதுகாக்கிறபடியான அறிவிப்பும் இல்லாது தமிழக மீனவர்களை மத்திய அரசு புறக்கணித்துள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அரசு துறை  ஊழியர்களின் லட்சத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ள நிதியமைச்சர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் மூலம் தேசத்திற்கு ஏற்பட்ட லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு குறித்த எந்தவிதமான கருத்தும் குறிப்பிடாதது கண்டிக்கத்தக்கது. விவசாயத்துறையில் அந்நிய நாட்டினர் முதலீடு செய்யும் சில திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை அடிமைப்படுத்தும் முயற்சி இது.

விவசாயிகளுக்கு தேவையான பாசன நீருக்கான வழிவகை, உரத்திற்கான மானியம் குறைப்பதற்கான நடவடிக்கை என தேசத்தின் விவசாயிகள் நலனை கருத்தில் கொள்ளாத இந்த பட்ஜெட்டில் மின் மினியாக சில அறிவிப்புகள் இருந்தாலும் ஒட்டுமொத்ததில், அம்பானிகளுக்கு போடப்பட்ட பட்ஜெட்  அய்யாச்சாமிகள் அம்போ என்று டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்