எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.14 - தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் விநியோக உரிமைக்காக கொடுத்த பணத்தில் ரூ.73 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டி வருவதாக சன் டி.வி.தலைமை நிர்வாக சக்சேனா மீது புகார் கொடுத்த விநியோகஸ்தர் சேலம் கந்தன் பிலிம்ஸ் செல்வராஜ் வீட்டில் நேற்று மாலை திடீரென வருவான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் சினிமாத்துறை தி.மு.க.தலைவர் கருணாநிதியின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து.பிரபல நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வைத்து மிரட்டி குறைந்த விலைக்கு படங்களை வாங்கி விநியோகதஸ்ர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடிவடி செய்து வந்தனர்.
அவுட் ரேட் முறையில் அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் படம் அதிகம் ஒடாததால் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விநியோக முறையில் படம் வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு பாக்கி பணம் வரவேண்டியது இருந்து கேட்டால் பணம் தரமால் இழுத்தடிக்கப்பட்டனர். சிலர் மிரட்டப்பட்டனர். இதே போல் சேலம் பிருந்தாவன் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர் சேலம் சினிமா நகரில் கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் விநியோக நிறுவனம் வைத்து பட விநியோகத்தில் பல ஆண்டுகாலமாக ஈடுபட்டார். இவர் சன் பிக்சர்ஸ் விற்பனை செய்த விசால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் சேலம் விநியோக உரிமையை ரூ.1.25 கோடிக்கு பெற்றார். அந்த படம் சரியாக போகாததால் அவருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.73 லட்சம் பாக்கி வர வேண்டியது. இருந்தது. அந்த பணத்தை தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரை இழுத்தடித்து. ஒரு கட்டத்தை பணம் தர முடியாது என்று தலைமை நிர்வாகி சக்சேனாவால் அவர் மிரட்டபட்டாரம். ஆட்சி அதிகாரம் தி.மு.க.வின் கையில் இருந்ததால் இவர்களை பற்றிய புகார்களை போலீசார் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு சில இடங்களில் புகார் கொடுத்தவர்கள் மீதே போலீசார் பாய்ந்தனர்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வரானதும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே தனது முதல் பணி என அறிவித்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் போலீஸ் கமிஷனரை சேலம் விநியோகஸ்தர் செல்வராஜ் தனக்கு சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் விநியோக உரிமை தொடர்பாக தர வேண்டிய ரூ.73 லட்சத்தை தர மறுப்பதாகவும் அதை பெற்று தருமாறும் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சக்சேனாவை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து சன் டி.வி.தலைமை நிர்வாகி சக்சேனா மீது திரைப்படத்துறையைச் சேர்ந்த பலர் புகார் கொடுத்தனர். கொடுத்தும் வருகின்றனர். சக்சேனாவிற்கு அடியாளக செயல்பட்ட மீடியேட்டர் ஐயப்பனையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவரது மற்ற கூட்டாளிகள் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் போலீசார் சன் டி.வி.யின் உரிமையாளர் கலாநிதி மாறனையும் இந்த புகாரில் விசாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை சக்சேனா மீது முதல் புகார் கொடுத்த சேலம் விநியோகஸ்தர் செல்வராஜ் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு செய்தனர். கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சேலம் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள சினிமா நகரில் உள்ள அவரது அலுவலகம்,பிருந்தாவனம் ரோட்டில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம்
சக்சேனா மீது புகார் கொடுத்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்சேனா தவறு செய்ததில் உண்மை இருப்பதால்தான் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் புகார் கொடுத்தவர்களை பழி வாங்க மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.
நிதித்துறையின் மத்திய இணையமைச்சராக உள்ள பழனி மாணிக்கம் த்தின் துறையின் கீழ் வரும் வருமான வரித்துறையினரை ஏவி பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவே சக்சேனாமீது புகார் கொடுத்தவர்கள் கருதுகின்றனர்.
மாநிலத்தை ஆண்டபோது இவர்கள் சட்டத்தை மீறி செய்த தவறுகளுக்குதான் மக்கள் எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் பதவிகளை வைத்துக் கொண்டு தங்கள் மீது புகார் கொடுப்பவர்களை பழி வாங்கும் நிலையை தி.மு.க.தொடர்தால் அனைத்தையும் உற்று நோக்கும் மக்கள் உள்ளாட்சி தேர்தல் உள்பட வரும் அனைத்து தேர்தல்களிலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குமறுகின்றனர்.சன் டி.வி.நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட திரைப்படத்துறையினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.