முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டு வெடிப்பை நடத்தியது தற்கொலை படை தீவிரவாதிகளா?

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை15 - மும்பையில் நேற்று முன் தினம் 3 இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பு தாக்குதலை தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நேற்று முன்தினம் 3 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு ஜாவேரி பஜார் பகுதியில் மாலை 6.54 மணிக்கு வெடித்தது. இதுதான் மிகவும் சக்தி வாய்ந்தது. 2-வது குண்டு ஒப்பேரா ஹவுஸ் என்ற இடத்தில் வெடித்தது. இந்த சம்பவம் ஒரு நிமிடம் கழித்து நடந்தது. 3-வது குண்டு தாதரில் கபுதார் கானா என்ற இடத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே வெடித்தது. 

இந்த 3 குண்டு வெடிப்புகளிலும் இது வரை 21 பேர் பலியாகிஉள்ளனர். 141 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கண்ட 3 இடங்களிலும் பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள். ஆகவே அதிக உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பவ இடங்களில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மும்பையில் இப்போது மழைக்காலம் என்பதால் சம்பவத்தின் போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால் தடயங்கள் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒபேரா ஹவுஸ் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சில காட்சிகள் பதிவாகி உள்ளன என்று கூறப்படுகிறது. அந்த காட்சிகள் போலீசாரின் துருப்புச்சீட்டாக உள்ளது. 

இந்த குண்டு வெடிப்புகளை இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள்  தான் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் இதற்கு முன்னரும் பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிரவாத இயக்கத்தின் தாயாக விளங்குவது சிமி அமைப்பு ஆகும். இது தடை செய்யப்பட்ட பிறகு இந்திய முஜாகிதீன் என்ற பெயரில் உருவெடுத்துள்ளது. இந்த இயக்கத்திற்கும் பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் இ தொய்பா இயக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. இவர்களிடமிருந்துதான் ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை பெற்று வருகிறார்கள். அதற்காக இவர்கள் ஆட்களை அனுப்பி வருகிறார்கள். இவர்கள் 2005-ம் ஆண்டு முதல் தொடர்குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருகிறார்கள். அந்த ஆண்டு டெல்லியில் அக்டோபர் 29-ம் தேதி தொடர்குண்டு வெடித்தன. இவற்றில் 62 பேர் பலியானார்கள். 2006-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி உபி மாநிலம் வாரணாசி சங்கட் மோட்சன் ஆலயத்திலும், ரெயில் நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் பலியாகினர்.  

2008-ம் ஆண்டு மே 13-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 80 பேர் பலியாகினர். அதே ஆண்டு பெங்களூரிலும் ஜூலை 25-ம் தேதி குண்டு வெடித்தது. ஜூன் 26-ம் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 17 குண்டுகள் வெடித்து 53 பேர் பலியாகினர். செப்டம்பரில் டெல்லியில் குண்டு வெடித்து இதில் 24 பேர் பலியாகினர். 2010-ல் பூனே நகரில் ஒரு பேக்கரியில் குண்டு வெடித்து 17 பேர் பலியாகினர். மேற்கண்ட அனைத்து பரிதாபகரமான சம்பவங்களுக்கும் இந்திய முஜாகிதீன்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து ஒரு சிலர்தான் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் இந்த சம்பவம் தொடர்பாக சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவங்களுக்கு பின்னணியாக செயல்பட்ட யாரும் கைது செய்யப்பட வில்லை. அதனால்தான் அவர்கள் தொடர்ந்து இந்த நாசவேலைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 2008 ம் ஆண்டு முதல் இந்த தீவிரவாதிகள் பலம் பெற்று வருவதாக குஜராத் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த 20 பேர் மட்டுமே இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கானோர் பதுங்கித் திரிகின்றனர். 

மும்பை தாக்குதலில் பலியான 18 பேரின் உடல்களை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு மனித உடலில் வயர்களும், மின்னணு சாதனங்களும் சுற்றப்பட்டு இருந்தன என்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த தாக்குதலை தற்கொலைப் படை தீவிரவாதியோ அல்லது தீவிரவாதிகளோ நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் மேலும் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago