முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: விரிவுரையாளர் கைது

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.15 -  தனது பணி நீக்கத்துக்கு காரணமாக இருந்த சக ஊழியரை பழிவாங்க அவர் பெயரில் போலி சிம்கார்டு வாங்கி முதல்வர் ஜெயலலிதா மற்றும் தலைமைசெயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காஞ்சிபுரத்தை சேர்ந்த முன்னாள் கல்லூரி விரிவுரையாளர் சைபர் கிரைம் போலீசரால் கைது செய்யப்பட்டார். இது குறித்த விபரம் வருமாறு :

கடந்த (ஜூலை) 11 ம்- தேதி சென்னை காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு திருச்சியை சேர்ந்த சண்முகம் என்பவர் கைபேசியிலிருந்து குறுஞ்செய்தி மூலமாக முதல்வர் உயிருக்கும் தலைமை செயலகத்துக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த செய்தி குறித்து தீவிர விசாரணைக்கு சென்னை காவல் துறை ஆணையாளர் திரிபாதி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவிற்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 506 (11)507 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008  சட்டப்பிரிவு 66 (அ)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  விசாரணையில் குறுஞ்செய்தி மிரட்டல் விடப்பட்ட மொபைல் எண் திருச்சியில் உள்ள ஒரு விலாசத்தின் பேரில் பொய்யாக பெறப்பட்டிருப்பது தெரியவந்தது.  குறிப்பிப்பட்டிருந்த விலாசத்தில் விசாரணை செய்ய திருச்சி சென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, திருச்சி நகர காவல்துறை உதவியுடன் அவ்விலாசத்தை ஆராய்ந்தது.  மேற்கண் விலாசத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபர் யாரும் அங்கு வசிக்கவில்லை என்பதும் அது போலியான விலாசம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.  தகவல் தொழில் நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட்டதில் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் மிரட்டல் எஸ்.எம்.எஸ். விடுத்தது தெரியவந்தது. எனவே அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

விசாரணையில் இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியின் பணி நீக்கம் செய்யப்பட்ட விரிவுரையாளர் என்பதும், தன்னை பணி நீக்கம் செய்வதற்கு காரணமாக இருந்த கல்லூரி ஊழியரை பழிவாங்குவதற்காக, அக்கல்லூரி ஊழியரின் புகைப்படத்தை வைத்து மேற்கண்ட மொபைல் போன் சிம் கார்டை பெற்றுள்ளது தெரியவந்தது. போலியான முகவரி மற்றும் புகைப்படத்தை பெற்றுக் கொண்டு சிம்கார்டு விற்பனை செய்தவரும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago