முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுரா சட்டசபை கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

அகர்தலா, ஜூலை 15 - திரிபுரா சட்டசபைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை வருகிற 22 ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைக்கிறார். திரிபுரா மாநில சட்டசபைக்கு ரூ. 9 கோடி மதிப்பில் புதிய சட்டசபை கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை திறந்துவைக்க பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு திரிபுரா மாநில அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று இம்மாதம் 22 ம் தேதி இந்த கட்டிடத்தை திறந்துவைக்க பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலக செயலகம் உறுதி செய்துள்ளது. அதன்படி பிரதமர் மன்மோகன்சிங் அன்று காலை டெல்லியில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு செல்கிறார். திரிபுரா சட்டசபை திரிபுரா மாநிலத்தின் முன்னாள் மன்னர் மாணிக்யாவின் அரண்மனையில் இயங்கிவந்தது. ஏற்கனவே சட்டசபை இயங்கிவந்த அரண்மனை இனி அருங்காட்சியகமாக மாற்றப்பட இருப்பதால் திரிபுரா சட்டசபைக்கு புதிய கட்டிடம் கட்டபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்