முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவடி அருகே குடோனில் தீ விபத்து

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

அம்பத்தூர், ஜூலை.15 - சென்னை அடுத்த ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் கோவர்த்தனகிரி அருகே தனியார் குடோனில் தீப்பிடித்தது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. ஆவடி கோவர்த்தனகிரி அருகே தனியாருக்கு சொந்தமான குடோன்கள் உள்ளன. இங்கே பல்வேறு கம்பெனிகள் தங்கள் பொருட்களை குறிப்பாக பீடி, சிகரெட், தீப்பெட்டி, ஊதுபத்தி போன்றவற்றை இங்கே சேமித்து வைத்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வார்கள். இந்த குடோனில் நேற்று இரவு 9 மணியளவில் ஒரு மூலையில் இருந்து புகை வந்தது. காற்றின் வேகம் பலமாக இருந்ததால் புகை தீப்பிழம்பாக மாறி குடோன் முழுவதும் தீ பிடித்து எரிந்தது.

இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 6 வண்டிகளுடன் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடினார்கள். காற்று பலமாக வீசியதால் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி செய்து தீயை அணைத்தனர். மேலும் குடோனில் தீப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் தீ எரிந்து கொண்டே இருந்தது. பின்னர் பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து தீப்பெட்டிகளை வெளியே எடுத்து போட்டார்கள். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்