எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாக்கம், ஜூலை.15 - அணு விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கல்பாக்கத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 நாட்களாக பேரிடர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓர் அணுசக்தி நிறுவனத்திலிருந்து எதிர்பாராதவிதமாக வெளிப்படும் கதிரியக்கமே அணு விபத்து எனப்படும். அணுக்கதிர் உடலில் படிவதை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, கதிரியக்கத்தின் தீவிரத்தை குறைப்பது எப்படி? கதிரியக்கம் எவ்வாறு மனித உடலை பாதிக்கிறது? இயற்கை சூழலில் எற்படும் கதிரியக்கம் என்ன? அணு விபத்து ஏற்பட்டால் நாம் மேற்கொள்ள வேண்டியது என்ன? அணு விபத்து ஏற்பட்டுள்ளது என நாம் அறிய நேரும்போது என்ன செய்ய வேண்டும்?
வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை தொடர்பு கொண்டு பேசலாமா, எந்த வகையான செயல்களில் கவனம் கொள்ள வேண்டும், வீட்டின் உட்புறம் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும், மாற்று இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன போன்ற விவரங்களுக்கான செயல்முறைகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அணு விபத்து நேரங்களில் அமைதி காக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வானொலி, தொலைக்காட்சி மற்றும் ஒலி பெருக்கி மூலம் தரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அருகில் இருக்கும் வீடு அல்லது பொதுமக்களுக்கான கான்கிரீட் கட்டிடத்திற்குள் சென்று அங்குள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு உள்ளேயே இருக்கவும். புகலிடங்களில் தங்குவதற்காக அமைதியாக வெளியேறி தரப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். எரிவாயு அடுப்பு, சிலிண்டரை அணைத்து விட்டு மின்சார பிளக்குகளை அகற்றிவிட வேண்டும்.
அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரையும் அழைத்து செல்ல வேண்டும். புகலிடத்திற்கு சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்ல வேண்டும். அடிப்படை தேவையான பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். அதாவது வானொலி, டார்ச் விளக்கு, பணம், வங்கி புத்தகம், மாற்று உடை, முகமூடி, கைக்குட்டை, அவசரத் தேவைக்கான உணவு மற்றும் குடிநீர். எல்லா கதவுகளையும் பூட்டி விட வேண்டும்.
உடல் ஊனமுற்றோர் குறித்த தகவல்களை உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் புகலிடம் செல்ல உதவவும். செல்ல பிராணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தந்து அவை வீட்டின் உள்ளே இருக்க செய்யவும். காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தரும் அறிவுரைகளை பின்பற்றவும் என்பதை பற்றிய செயல் விளக்கமுறை செய்து காண்பிக்கப்பட்டது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பேரிடர் மீட்புபடை விரைவில் அமைக்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணை தலைவர் சசிதர ரெட்டி கூறினார்.
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் தக்க பாதுகாப்பு வழங்கும் என்று எடுத்துரைத்தார். இப்பாதுகாப்பு ஒத்திகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிவசண்முகராஜா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசீஸ் சட்டர்ஜி, பயிற்சி கலெக்டர் ஆர்.லலிதா, கோட்டாட்சியர் வீரப்பன், செங்கல்பட்டு ஆ.டி.ஓ. ஆலின் சுனேகா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் (காவல்) மனோகரன், மதுராந்தகம் டி.எஸ்.பி. தணிகைவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி. முத்துராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் (கோட்ட துணை) சுப்பிரமணி, தாசில்தார்கள் திருக்கழுக்குன்றம் தாசில்தார் மல்லிகா, செங்கல்பட்டு தாசில்தார் வெங்கடேசன், குன்னத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் 100-க்கும் சென்னை அணுமின் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏற்றப்பட்டு வெங்கம்பாக்கம், அணுபுரம், வீராணம் பைபாஸ், கொத்திமங்களம், ஆசிரியர் நகர் வழியாக திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பிளஸ்சிங் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் ஆசிரியர் நகர் அருகே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு உறுப்பினர் மேஜர் ஜெனரல் தத்தா மற்றும் பேரிடர் மேலாண்மை பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு கதிர் வீச்சு உடலில் பரவினால் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல் விளக்கங்களை செய்து காட்டினர்.
முதல் பேருந்தில் இறக்கப்பட்ட பேருந்தில் ஒருவர் மீது ரேடியேசன் மானிட்டர் கருவி மூலம் கதிர்வீச்சு உள்ளதா என சோதித்தனர். பின்னர் அவர்கள் உடைகளை கழற்றி பாதுகாப்பாக உள்ள ஒரு பெட்டியில் போட சொன்னார்கள். பின்னர் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறான செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,