முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தா புகார்: நக்கீரன் கோபால் முன்ஜாமீன் மனு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.15 - நித்தியானந்தாவின் மேனேஜர் அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க நக்கீரன் கோபாலும், இணை ஆசிரியர் காமராஜும் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். தங்களை மோசடியாக சித்தரித்து வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியதாகவும், ஒளிபரப்பாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் சாமி நித்தியானந்தாவின் மேனேஜர் சர்மானந்தா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் மீது போலீசார் மோசடி, மிரட்டல் போன்ற வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் தாங்கள் நித்தியானந்தாவின் மேனேஜர் புகாரின் பேரில் கைது செய்யப்படாமல் இருக்க நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago