முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆவதற்கான தகுதி உள்ளது

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.15 - கச்சதீவு மீட்பு தீர்மானம்  கொண்டு வந்துள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆகும் தகுதியுள்ளது என்று சரத்குமார் எம்.எல்.ஏ கூறினார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நடிகர் சரத்குமார் நேற்று தனது பிறந்தநாளை சென்னையில் உள்ள தனது வீட்டில் எளிமையான முறையில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாட கட்சியில் முடிவு செய்யப்பட்டது.

மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், இலங்கை தமிழர்கள் இன்னல்கள் என சோக நிகழ்வுகல் உள்ளதால் தனது பிறந்தநாளை நடிகர் சரத்குமார் எம்.எல்.ஏ எளிமையான முறையில் கொண்டாடினார். அவருக்கு கட்சியின் துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாவட்ட செயலாளர் எம்.ஏ.சேவியர், படஅதிபர்கள் டி.சிவா, சீனிவாசன், வெங்கட், மனோஜ்குமார், சந்திரேசன், சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளர் நாகராஜன், தலைமை நிலைய செயலாளர் ஜெயபிரகாஷ், சேதுராமன் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

தனது பிறந்தநாளையொட்டி சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் தமிழர்கள் இன்னல் படுவதாலும், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தாலும் நான் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் தொண்டர்களும், தலைவர்களும் நேரில் வந்து வாழ்த்து  தெரிவித்தனர்.

எனது பிறந்தநாளை இளைஞர் தினவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கட்சி தொண்டர்களையும் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டேன். அதன்படி அவர்கள் எனது பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கும், எளியவர்களுக்கும் நலதிட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாகவும், கச்சதீவு மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆகும் தகுதி படைத்துவிட்டார்.

ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் எதிர்கட்சியாக செயல்படமாட்டோம். மும்பையில் நடைபெற்ற வெடிக்குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் ஆகும். இந்தியா அரசும் மாநில உளவு துறையும் சரியாக செயல்படவில்லை என்பதே இது காட்டுகிறது.திரைப்பட துறையானருக்கு பையனூரில் கொடுக்கப்படும் இடம் சொந்தமாக்கப்பட வேண்டும். லீசுக்கு கொடுத்தால்  எப்படி பணத்தை கட்ட முடியும்?. தெற்கு சூடானுக்கு சுதந்திரம் கிடைத்ததை போல் தனிஈழம் மலர்ந்தே தீரும்.

திரைப்படத்துறையினர் கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா பரிசீலிப்பார் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago