எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, ஜூலை.16 - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அதிகார போதை தலைக்கேறிவிட்டது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- மும்பையில் சில தினங்களுக்கு முன்பு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது. ஆனால் பிற கட்சியினர் ஆறுதல் கூட சொல்லவில்லை. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் மக்களுக்காக பாடுபடும். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். நான் பெரியவனா? நீ பெரியவனா? என்பதற்கு இப்போது நேரமில்லை. இடமுமில்லை. சோனியாகாந்தியின் ஆசி இருந்தால் தான் ஹீரோ. இல்லாவிட்டால் ஜீரோ. புதுவையில் காங்கிரஸ் தான் பலமான கட்சி. நேற்று அடித்த காற்றில் சிலர் மேல சென்று விடலாம். ஆனால் அவர்கள் மீண்டும் கீழே வரலாம்.
புதுவையில் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது. 10 ஆண்டுகள் புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். மக்கள் தீர்ப்பை மதித்து காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியது.
ஆனால் இவர்கள் பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள். கடந்த 21/2 மாதத்தில் அதிகார போதை தலைக்கேறி செயல்பட்டு வருகிறார்கள். அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகின்றனர்.
ஏற்கனவே 5 ஆயிரம் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். தற்போது பாப்ஸ்கோவில் பணியாற்றிய 480 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இப்படி ஏன் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்? என்று விசாரித்தால் அவர்கள் தொகுயை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த செயலை செய்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. பணி நிரந்தரம் செய்வார்கள் என்று நம்பித்தான் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் அந்த மக்களை கண்ணீரில் அழ வைத்துள்ளனர். அந்த கண்ணீர் சும்மா விடாது.
மத்திய அரசின் திட்டமான 35 கிலோ திட்டத்தைதான் தங்களுடைய திட்டம் போல நிறைவேற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்து 3 மாத மாகியும் சிவப்பு மற்றும் மஞ்சள் ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. பென்சன் தொகை பெற்று வந்த 20 ஆயிரம் பேரை நீக்கிவிட்டு அதில் கிடைத்த நிதியின் மூலம் மற்றவர்களுக்கூ ரூ. 1000 பென்சன் வழங்கி உள்ளனர்.
டெல்லிக்கு சென்றால் தான் நிதி கிடைக்கும். சேலத்திற்கு சென்றால் நிதி கிடைக்காது. எப்போதும் நெற்றியில் விபூதி பட்டையிட்டாலும் நிதி வராது. முதல்வர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ரூ.50 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும். ஆனாலும் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.
சென்டாக் மாணவர்களுக்கு நிதி உதவி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த அரசு மைனாரிட்டி அரசு. சபாநாயகரை தவிர்த்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பலம் 14 ஆக உள்ளது. தராசு எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயலாம். காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி போராட வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசு இருப்பதால்தான் டெல்லிக்கு ரெயில் விடப்பட்டுள்ளது. கோவைக்கும், மும்பைக்கும் இடையே ரெயில் விடப்படும். சில பத்திரிக்கையாளர்கள் காங்கிரசார் குழப்பத்தில் இருப்பதாக எழுதுகிறார்கள். எங்களிடையே எந்த குழப்பமும் இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சோனியாகாந்தியின் விசுவாசிகள். நமது கூட்டணியில் தான் தி.மு.க. உள்ளது.
ஆனால் புதுவை தி.மு.க. நிர்வாகிகள் சிலர் மாற்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்த பிரணாப் முகர்ஜி கூட்டணி பலமாக உள்ளது என்று தெரிவித்தார். புதுவை தி.மு.க.வினருக்கு அவர்களது தலைவரே பதில் சொல்லி விட்டார். காங்கிரஸ் தோல்வியை கண்டு துவளாது. கட்சிக்குள் போராடினால் பலவீனமாகி விடுவோம். ஆட்சியின் தவறுகளை எதிர்த்து போராட வேண்டும். அப்போது தான் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் பழக்கம் இல்லை. ஒற்றுமையாக இருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும். தொண்டர்களுக்க மனக்குறைகள் இருந்தால் கட்சி தலைவரையோ, என்னையோ, மாநில பொறுப்பாளரையோ, அகில இந்திய தலைவரையோ சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஒற்றுமையாக இருந்து கட்சியை பலப்படுத்துவோம் என்று காமராஜர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம். காமராஜர், ராகுல், சோனியா ஆகியோரின் பிறந்த நாளை முப்பெரும் விழாவாக கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.