முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.16 - அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும், அனவரதநல்லூர் கிளை கழக செயலாளருமான கே.மாரி சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றிய மாணவர் அணித்தலைவர் ஜெ.முருகன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், அத்திப்பாக்கம் ஆதிதிராவிடர் கிளை கழக செயலாளர் பி.மணிவேல் ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.

தலைமை கழக பேச்சாளரும், வடசென்னை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளருமான மண்ணடி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். ஆரம்ப காலம் முதல் கழகத்தில் பணியாற்றி வந்த அன்பு சகோதரர் மண்ணடி கிருஷ்ணமூர்த்தி, தலைமை கழக பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளையும், தி.மு.க.வினரின் பல்வேறு மக்கள் விரோத செயல்களையும் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஆவார். அன்பு சகோதரர்கள் மாரி, முருகன், மணிவேல் மற்றும் மண்ணடி கிருஷ்ணமூர்த்தியை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்  கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்