முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தல்: ரபி போட்டியின்றி தேர்வு

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.16 - மாநிலங்களவை தேர்தலில் ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினாக இருந்த கே.வி.ராமலிங்கம், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழக அமைச்சர் ஆனார். இதைத்தொடர்ந்து தனது எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். காலியான அந்த இடத்துக்கு அ.தி.மு.க. சார்பில் வில்லியம் ரபி பெர்னார்ட் போட்டியிடுவார் என்று அ.தி.மு.க.  பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி ரபி பெர்னார்ட் மாநிலங்களவை வேட்பாளராக தமிழக சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஜமாலுதினிடம் கடந்த 11-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, அக்ரி என்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி, பி.வி.ரமணா, புத்திசந்திரன், முகமது ஜான் ஆகியோர் வேட்பு மனுவை முன்மொழிந்தனர்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் டேம், ராமா நகரைச் சேர்ந்த டாக்டர் கே.பத்மராஜன், நாகர்கோவிலைச் சேர்ந்த நாகூர் மீரான் பீர் முகமது ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் ஜூலை 14-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவை தேர்தல் பார்வையாளருமான பிரவீண்குமார் முன்னிலையில், மாநிலங்களவை தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான ஜமாலுதீன், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். டாக்டர் பத்மராஜன் வேட்பு மனுவை யாரும் முன்மொழியவில்லை. அதனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதுபோல நாகூர்மீரான் பீர் முகமது வேட்பு மனுவையும் யாரும் முன்மொழியவில்லை. அதோடு மட்டுமல்லாமல் டெபாசிட் தொகையையும் அவர் செலுத்தவில்லை. இதன் காரணமாக அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளரான ரபி பெர்னார்ட் மனு மட்டும் ஏற்கப்பட்டது என்று தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

இதையடுத்து ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. பின்னர் மாலை 4.30 மணியளவில் ரபி பெர்னார்ட் தான் ராஜ்ய சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி முதல்வர் ஜெயலலிதாவிடம் ரபி பெர்னார்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை காண்பித்து ஆசி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago