எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டவுன்ட்டன், ஜூலை 17 - இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் சோமர்செட் அணி அதிரடியாக ரன்களை குவித்தது. விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பவுலர்கள் திணறுகிறார்கள்.இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஸ்ட்ராஸ் தலைமையிலான அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் 1 டுவெண்டி -20 போட்டி, 4 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றது. டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடர் பெரும் சவாலாக இருக்கும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்தின் கவுன்டி அணியான சோமர்செட் அணிக்கு எதிராக 3 நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு கவுதம் காம்பீர் தலைமை வகித்தார். சோமர்செட் அணிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமை வகிக்கிறார். டாஸ் வென்ற சோமர்செட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஸ்ட்ராஸ் மற்றும் அருள் சுப்பையா ஆகியோர் களமிறங்கினர். அருள் சுப்பையா மலேசிய தமிழர். இவர் மலேசிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கடந்த 1999 முதல் விளையாடி வருகிறார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டுமுதல் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார். அருள் சுப்பையா ஒரு ஆல்ரவுண்டர் குறிப்பிடத்தக்கது.
ஸ்ட்ராஸ், சுப்பையா இருவரும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக ஸ்ட்ராஸ் அதிரடியாக விளையாடினார். அருள் சுப்பையா துவக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் இணைந்து சோமர்செட் அணியின் ஸ்கோரை 101 க்கு உயர்த்தியபோது 78 ரன்களை எடுத்திருந்த ஸ்ட்ராஸ், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித்மிஸ்ராவின் பந்தில் கீப்பர் சாகாவினால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக காம்ப்டன் களமிறங்கினார். இதன்பிறகு சுப்பையாவும், காம்ப்டனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். காம்ப்டன் 74 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். அருள்சுப்பையா 179 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். அணியின் எண்ணிக்கை 324 க்கு உயர்ந்தபோது காம்ப்டன், பார்ட்டைம் பவுலர் சுரேஷ் ரெய்னாவின் பந்துவீச்சில் யுவராஜ் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 88. இதையடுத்து சோமர்செட் அணியின் ஜோன்ஸ் களமிறங்கினார். இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சோமர்செட் அணி 76.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 ரன்களை குவித்தது. அந்த அணியின் அருள்சுப்பையா ஆட்டமிழக்காமல் 222 பந்துகளில் 145 ரன்களை குவித்துள்ளார். மேலும் ஜோன்ஸ் 1 ரன் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய தரப்பில் அமித்மிஸ்ரா, சுரேஷ் ரெய்னா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே வருகிற 21 ம் தேதி முதலாவது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் சோமர்செட் அணிக்கு எதிரான இந்திய அணியின் பந்துவீச்சு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக ஜாஹீர்கான் போன்ற அனுபவ பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த முடியாதது ஆச்சரியமான விஷயம். முனாப் பட்டேல் சிக்கனமாக பந்துவீசினாலும் அவராலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. பந்துவீச்சில் இந்திய அணி முழுக் கவனம் செலுத்தினால் மட்டுமே வலுவான இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சாதிக்க முடியும்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் என்று ஆரூடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் வாகனும் இங்கிலாந்து அணி வலுவான அணி என்று குறிப்பிட்டுள்ளதோடு, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ட்ரெம்லெட், ஆன்டர்சன் ஆகியோர் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.