முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி பெண் அதிகாரி கொலை: துப்புதுலக்க போலீஸ் முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 17 - பட்டினப்பாக்கம் வங்கி பெண் அதிகாரி கொலையில் துப்பு துலங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரியின் செல்போன் கொலையாளி எடுத்து சென்றுள்ளதால் இதை வைத்து கொலையாளியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- மந்தைவெளி மார்க்கெட் பகுதி வேதாச்சலம் கார்டன் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் சொக்கலிங்கத்தின் மனைவி நாச்சாள் (20). அமெரிக்கன் வங்கியில் அதிகாரியாக வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் பட்டப்பகலில் வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரை மர்ம ஆசாமி கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பி ஓடி விட்டான். நாச்சாள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி, வளையல்கள் மட்டும் கொள்ளை போயிருந்தது. கொலை செய்யப்பட்ட வங்கி அதிகாரி பகலில் வீட்டில் இருப்பதை தெரிந்தவர்தான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், கொலையாளி விரைவில் சிக்கி விடுவான் என்றும் போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகை, தடயங்கள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளது. சொக்கலிங்கம் வீட்டிற்கு வந்து போக கூடியவர்கள் யார்? யார்? என்று விசாரணை நடத்தப்பட்டதில் தச்சு தொழிலாளி ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாச்சாள் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு மரவேலைகளை அவர்தான் செய்துள்ளார். எதிரே உள்ள வீட்டு வேலையை செய்த அதே கார்பெண்டரைதான் இவரும் நியமித்துள்ளார். அந்த வீட்டில் நேர்த்தியான மர வேலைகளை அவர் செய்திருந்ததால் அவருக்கு இந்த வேலையை சொக்கலிங்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சந்தேகப்படும் தச்சு தொழிலாளியின் போனிற்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட நாச்சாளின் செல்போனை காணவில்லை. அதை கொலையாளி எடுத்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த போனும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அந்த போனில் யார்? யார்? பேசினார்கள். யாருக்கு அவர் கடைசியாக பேசி இருக்கிறார் போன்ற தகவல்கள் தெரிந்தால் கொலையில் துப்பு துலங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது போன் சிக்காததால் அந்த போன் நிறுவனத்தில் பதிவாகி உள்ள எண்களை பெற போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். அந்த பட்டியலின் மூலம் கொலைக்கான காரணம், கொலையாளி யார்? என்பது தெரிந்து விடும்.   கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கார்பெண்டர் இருக்கும் இடத்தை தேடி வருகிறார்கள். கார்பெண்டர் சிக்கினால் உண்மை தெரிந்து விடும்

மேலும் கொலையாளி நகைகளை திருடாததால் கொலைக்கான காரணம் தனிப்பட்ட விரோதமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பெண் அதிகாரியின் உறவினர்கள், தனிப்பட்ட விரோதிகள் யாராவது இருக்கிறார்களா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago