முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.40 லட்சம் மதிப்பிலான அபின் கடத்தி வந்த 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.17​- சேலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான அபினை கடத்தி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாநகரில் போதைப் பொருளான அபினை 2 பேர் கடத்தி வருவாத சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ராமு, இன்ஸ்பெக்டர் ஜான், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜூ,சந்தானம்,செல்வராஜ் மற்றும் போலீசார் சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்களில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் அவர்கள் வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது அவர்களது வண்டியில் பயங்கர போதை பொருளான அபின் 4 கிலோ இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள குளக்காடு பகுதியைச் சேர்ந்த வேலவன்(35), ரங்கசாமி(30) ஆகியோர் எனவும், இந்த போதை பொருள் உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் இருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்டு இவர்கள் சேலத்தில் கொண்டு வந்து விற்பனை செய்வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து போதை பொருளையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்