முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். அரசு கொள்கையை மாற்ற அத்வானி அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.19 - பயங்கரவாத செயல்களை தடுப்பதிலும், பயங்கரவாதிகளை தண்டிப்பதிலும் இப்போது கடைப்பிடிக்கும் கொள்கைகளை மத்திய மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். இது குறித்து தன்னுடைய இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு,

மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக மகராஷ்டிர மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவானையோ, மாநில உள்துறை அமைச்சர் பாட்டீலையோ குறைகூற முடியாது. பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கொள்கை வகுக்கும் இடத்தில் இருக்கும் மத்திய அரசை தான் குறை சொல்ல வேண்டும். 

பயங்கரவாத செயல்களை எல்லைக்கு அப்பாலில் இருந்து ஊக்குவிக்கிறவர்கள், பணமும், ஆயுதங்களும் கொடுத்து பயிற்சி தந்து அனுப்பி வைக்கிறவர்களையும் அவர்களுக்கு அடைக்கலம் தருபவர்களையும் அடையாளம் கண்ட உடனே அரசு அவர்களை கடுமையாக ஒடுக்க வேண்டும். எல்லைக்கு அப்பாலிருக்கும் பயிற்சி தளங்களையும், முகாம்களையும் அழிக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்யாதிருந்தால் பயங்கரவாதிகள் இப்படிப்பட்ட நாசவேலைகளை அடிக்கடி செய்து கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்