முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு வேண்டும்: அதிகாரிகளிடம் முறையிட்ட ஆ.ராசா

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.19 - திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளில் முக்கிய பிரமுகர்களான சுரேஷ் கல்மாடி, ஆ. ராசா உள்ளிட்டோர் தங்களுக்கு கிரிமினல் கைதிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக வேனில் அழைத்து செல்லும் போது கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள கைதிகளை தங்களுடன் சேர்த்து அழைத்து வருவது கூடாது என்று அவர்கள் சிறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். கொலை, கொள்ளைக்காக கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கும் கைதிகளில் பலர் பலமுறை கைதானவர்கள். அவர்கள் சிறை காவலர்களுக்கும் சிறை விதிகளுக்கும் அஞ்சுவதே இல்லை. எனவே அவர்களுடன் சேர்ந்து செல்லும் போது என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே செல்ல வேண்டியதுள்ளது. 

இதே போல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலுக்காக கைது செய்யப்பட்டுள்ள கல்மாடி, வி.கே. வர்மா, லலித் பளோட், ஜெயச்சந்திரன், சுர்ஜித்லால், பிரசாத் உள்ளிட்டோர் கோரியுள்ளனர். எதற்காக சிறையை விட்டு வெளியே அழைத்து செல்ல வேண்டும். வீடியோ கான்பரன்சிங்காகவே விசாரணையை நடத்துவோம் என்று ராசா முறையிட்டிருக்கிறார். அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி தல்வந்த்சிங் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்