முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா: அஜீத் சிங்குடன் டி.ராஜா சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.19 - லோக்பால் மசோதா மற்றும் நில கையகப்படுத்துதல் மசோதா தொடர்பாக ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத் சிங்கை வலது கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா நேற்று சந்தித்து பேசினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இது தொடர்பாக இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையாக அஜீத்சிங்கை வலது கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா நேற்று சந்தித்து பேசினார். மேலும் இந்த சந்திப்பின்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது. 

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டி.ராஜா, நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவோம் என்றார். பல்வேறு பிரச்சினைகள் குறித்து அஜீத்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றார். நிலம் கையகப்படுத்துதல் மசோதா, லோக்பால் மசோதா ஆகியவைகள் குறித்தும் அஜீத் சிங்குடன் சந்தித்து பேசினேன். இந்த இரண்டு மசோதா விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறதோ என்பது தெரியவில்லை. ஆளும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் குழம்பிப்போய் இருக்கிறது. பாரதிய ஜனதாவும் நல்ல நிலையில் இல்லை என்று டி.ராஜா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்