முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்சிங்கிடம் விசாரணை: டெல்லி போலீஸ் முடிவு

புதன்கிழமை, 20 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.20  - பாராளுமன்றத்தில் வாக்களிக்க ரூ ஒரு கோடி பணம் தரப்பட்டதாக எழுந்த வழக்கில் மாநிலங்களவை உறுப்பினரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அமர்சிங்கிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து கருத்து கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினரை விசாரணை செய்ய வேண்டுமானால் அவை தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். எனவே மத்திய உள்துறையிடம் ஆலோசனை கேட்டு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. இவ்வழக்கில் அமர்சிங்கின் உதவியாளர் சக்சேனா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இப்போது அமர்சிங்கும் காவல்துறையினரின் வலையில் சிக்குவாரா என்று டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago